(ஜெயரமணி)
அறிமுகம்
எனக்கு சாண்டில்யனின் நாவல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவருடைய கதைகளுக்குள் என்னுடைய கற்பனைகளைச் சேர்த்து இதனைப் படைக்கிறேன். படித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். இந்த என் முதல் முயற்சி. சரித்திரக் காவியம் படைப்பதில் ஈடு இணையில்லாத மாமேதையின் நூற்றாண்டில் அந்த அறிஞருக்கும், அவர் படைப்புக்களுக்கும் நான் சமர்ப்பிக்கும் என் இதயங்கலந்த அஞ்சலியாகும். இந்த என் கன்னிமுயற்சியில் எந்த விதத்திலும் அவரின் நினைவுகளுக்கோ, சரித்திரப் புகழுக்கோ அவமதிப்புச் செய்யும் என்ணம் கடுகளவும் இல்லை. மூலக் கதையின் கருத்துக்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
******** ******** ******
மூலக் கதை—ராஜ முத்திரை
(படைத்தவர் – திருவாளர் சாண்டில்யன்)
இச்சிறுகதையின் முன்னடக்கம்).
*******
நூற்றாண்டு காணூம் சரித்திர மாமேதை திருவாளர் சாண்டில்யன் அவர்களின் பெருங்காவியமான ‘இராஜமுத்திரை” எனும் நவீனத்தில் பல சரித்திர படைப்புக் கதாபாத்திரங்கள் உலவி வருகிறார்கள். பல சம்பவங்கள் எல்லாம் அக்காலத் தமிழ் மன்னர்களான பாண்டிய, சேர வம்சத்தினர்களைப் பற்றியும் அவர்களின் வீர, தீர செயல்கள், போர்முறைகள், நாகரீகம், வாழ்ந்த முறைகள் பற்றியும் சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றன. நான் என் சிறு வட்டத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான பாண்டிய இளவரசன் வீரபாண்டியன், அவன் அன்புக்குரியவளான கொற்கைகோட்டைக் காவலன் மகள் இளநங்கை இருவரின் காதலின் தாக்கத்தைப் பற்றியும் அதனைத் தொடர்ந்து அவர்களிடையே உருவாகும் ஊடல்—கூடல் உறவு பற்றி மட்டும்தான் என் கற்பனைச் சிறகுகளை விரித்துள்ளேன். இந்த என் சிந்தனைகள்தான் இச்சிறுகதையின் இழைகள்.
. ******************
வீரபாண்டியனின் காதலி
(ஜெயரமணி)
--------
இலாபமும் நஷ்டமும்
“
கொற்கை கோட்டையின் எல்லை காட்டு விளிம்பில் இருந்த பெரிய மாளிகைக்கு பாண்டிய இளவலும், கொற்கையின் அதிபதியுமாகிய வீரபாண்டியனால் அனுப்பப்பட்ட கோட்டைக் காவலரின் மகளான இளநங்கை அங்கு தன்னை வரவேற்ற சேரமன்னன் வீரரவி உதய மார்த்தாண்டவர்மனைப் பார்த்து எந்த விதமான வியப்பையும் காட்டவில்லை. மாறாக சிரிய புன்சிரிப்பு மட்டுமே அவளின் வதனத்தில் தெரிந்தது. ஆனால் இளநங்கையின் முகத்தில் புன்சிரிப்பைக் கண்ட சேரமன்னன், தான் நினைத்தபடி அவள் தன்னைக் கண்டு சிரிதும் பயம் காட்டாது நின்றதைக் கண்டு ஏமாற்றமே அடைந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைக் கண்ட இளநங்கையோ தைரியமாக அவனை நோக்கியபடியே “அவர் உங்களைத்தான் இங்கு எதிர்பார்த்தார்.” என்றாள்.
“யார் அந்த அவர்” எனக் கேட்ட மன்னனை நோக்கிய இளநங்கை கொஞ்சமும் தயங்காது “நீங்கள் யாரை எதிர்பார்த்து இங்கு காத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அவர்தான்” எனப் பதில் உரைத்தாள். இப்படியே இருவருக்குமிடையில் வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியில் சேரமன்னன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
“இளநங்கை என் குறி எப்பவும் தப்பாது. வீரபாண்டியனைப் பிடிக்கத்தான் நான் திட்டமிட்டேன். அதனால்தான் நான் உன்னை என் வீரர்களைவிட்டு தோப்பில் மடக்கச் சொன்னேன். என் திட்டம் சரியாக நிறைவேறியது.”
எப்படி உங்கள் திட்டம் நிறைவேறியது? எனக் கேட்டவளிடம் விஷமமாகச் சிரித்துக் கொண்டே. “பசுவைத் தேடி காளை வந்துதான் தீரும்” என்றான். மன்னனின் பேச்சிலிருந்த விஷமத்தைப் புரியாது அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் இளநங்கை.
திகைப்புடன் தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த இளநங்கையை நோக்கிய வீரரவி “உனக்குப் புரியும்படியே சொல்கிறேன். வீரபாண்டியன் பத்து நாட்களாக கொற்கையில் தங்கி இருப்பதும், அவன் தினமும் உன்னைப் பார்த்துக் கொண்டு பொருனை நதிக் கரையில் உட்கார்ந்து இருப்பதையும் நானும் அறிவேன். அவன் என்றாவது ஒரு நாள் உன்னைத் தொடர்ந்து வருவான், அப்போது அவனைப் பிடிக்கலாமென்றுதான் நானும் பொருமையாகக் காத்திருந்தேன். ஆனால் அவன் ஏனோ நேற்றுவரையில் உன்னைத் தொடரவில்லை. நேற்று உன்னைத் தொடர்ந்தவனைக் கொல்ல என் வீரர்கள் தோப்பில் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நேற்று அவனுக்கு அதிர்ஷ்டமான நாள். அவனைக் கொல்ல நான் அனுப்பிய வீரர்கள் ஐவர் மரணமடைந்தார்கள். அவன் தப்பித்து விட்டான். இனி அவனைத் தேடுவதைவிட்டு அவன் என்னைத் தேடி வரவேண்டுமென்றுதான் நான் என்னுடைய பதக்கத்தைப் போட்டுவிட்டு வந்தேன். எப்படியும் அவனை இன்று சந்தித்து விடுவேன் என்றும் தெரியும். ஆனால் நான் எதிர்பார்க்காதது உன் வரவை. என் அதிர்ஷ்டம் இப்படி ஒரு எழிலரசி என்னைத் தேடி வந்திருப்பது.
“இதில் மன்னரின் அதிர்ஷ்டம் என்ன?’ என வினவிய இளநங்கைக்கு பதிலாகச் சொன்னான் மன்னன்.
“எப்படியும் உன்னைக் காக்க உன் காதலன் வீரபாண்டியன் இங்கு வருவான். இன்று இரவுக்குள் அவனும், அவனுடைய இந்தக் கோட்டையும் என் வசமாகிவிடும்.”
சேரனின் திட்டத்தைக் கேட்ட இளநங்கை ‘மன்னரின் எண்ணங்கள் கூடி வருமா?’ என் சந்தேகத்துடன் கேட்டாள்.
அதற்கு ஆணவமாகக் கூறினான் மன்னன். “இந்த மாளிகையில் என்னுடைய அதிகாரத்தைத் தடுக்க யாருமில்லை. ஏன்?. உன்னைப் படைத்த அந்த ஆண்டவனே வந்தால்கூட என்னுடைய திட்டம் நிறைவேறும்” என்று.
அவனின் ஆணாவமானப் பேச்சைத் தொடர்ந்து வந்தது அசரீரிபோல் வீரபாண்டியனின் குரல். “மகேசனின் முடிவுக்கு முன் எந்த மன்னனின் ஆணையும் நிற்காது. அவன் தீர்மானப்படித் தான் எல்லா விஷயங்களும் நடக்கும்’. குரலைத் தொடர்ந்து தான் இத்தனை நேரம் மறைந்திருந்த தூனைவிட்டு வெளியே வந்தான்.
திடீரென்று வீரபாண்டியன் வந்ததால் அங்கிருந்த இருவருமே அதிர்ச்சியடைந்தனர். முதலில் தனது அச்சத்தை சிறிது மறைத்துக்கொண்ட வீரரவி “உண்மைதான். எனது திட்டப்படித்தான் எதுவும் நடக்கும். இப்பொழுது நீயே வந்து விட்டாய். இனி உன்னைக் கைது செய்வதை யாரும் தடுக்க முடியாது. உன்னைக் கைது செய்தபின் இந்த கொற்கையும் என் வசமாகும். பின் இந்த பேரழகியும் என் வசமாவாள்” எனக் கூறியவனைத் தடுத்து வீர்பாண்டியன் நகைத்தான்.
பிறகு வீரரவியின் முகத்தைப் பார்த்து “”எல்லாம் உன் எண்ணப்படி நடந்தால் வீரபாண்டியனின் திட்டம் என்னவாகும்? உன் திட்டத்தை முறியடிக்கத்தான் நான் வந்திருக்கிறேன்” எனக் கூறியபடியே தூணில் நன்றாகச் சாய்ந்து நின்றான்.
“அப்படியா? உன்னுடன் எத்தனை வீரர்கள் வந்துள்ளார்கள்”? என்றவனுக்கு “நான் தனியாகத்தான் வந்துள்ளேன். என் பலம் என் புத்தியும், வாளும்தான்’ எனச் சுட்டிக்காட்டினான்
அவனின் துணிச்சலைப் பார்த்து சிறிது அச்சப்பட்டவன், தன் அச்சத்தை வெளிக்காட்டாது, தன் வீரர்களைச் சுற்றிப் பார்த்து வீரரவி கோபமாகக் கேட்டான் “ஏன் அவனை நோக்கி வேலை வீச உங்களுக்குச் சொல்லவேண்டுமா?”
உடனே வீரர்கள் வீரபாண்டியனை நோக்கி வரத்தொடங்கவும் இளநங்கை பயந்தாள். அதைப் பார்த்த சேரமன்னன் “உன் காதலனுக்குச் சொல். என்னிடம் வீணாக வார்த்தையாடி உயிரைவிட வேண்டாம் என்று.. மன்னிப்புக்கேட்டு உன்னையும் கூட்டிக்கொண்டு போகச்சொல்” என பரிகாசத்துடன் சொன்னான்.
அவனின் பரிகாசத்தினால் சினத்தின்வசப் பட்ட வீர்பாண்டியன் அவனைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் “யார் யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?” பாண்டிய நாட்டுக்குச் சொந்தமான முத்துக்களைக் களவாடிய சேர மன்னரும் அவருடன் களவில் கூட்டுச் சேர்ந்த சிங்களனும், போசளனும் தான் பாண்டிய மன்னர் சுந்தரதேவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” அந்த குற்றச் சாட்டுக்கள் பேரிடியாக வீரரவியின் சித்தத்தைக் கலக்கியது. சிறிது தடுமாரியவன் தன்னை சமாளித்துக் கொண்டு, அவனை நோக்கிய வீரரவி “ஏன் சந்தேகம். இப்போது யார் பிடியில் யார் இருப்பது?” எனக்கேட்டான்.
. ஆனால் அவனை நோக்கி விரபாண்டியனின் வாளும் நீண்டது. அதைக்கண்ட வீரர்கள் தங்களின் வாட்களைவீச முற்பட்டவுடன் “என் மீது வாளை வீசும் முன் உங்கள் மன்னனின் உயிர் பறந்துவிடும்” என வேகமாகச் சொன்னதுமல்லாது, தன் வாளால் தன்னை நோக்கி வந்த வாட்களையும் தடுத்தான், தன் வீரர்கள் தயங்குவதைக் கண்ட வீரரவி “ஒருவனைப் பிடிக்க உங்களுக்குப் பயமா? வேலைவீசுங்கள்” எனக் கூவினான். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் வீரபாண்டியன் தூணைச்சுற்றிக்கொண்டு வருவதைக் கண்ட வீரர்கள் மீண்டும் அவனைச் சுற்ற முற்பட்டனர். அதே சமயம் தன் இடுப்பிலிருந்த குறுவாளையும் இடது கையால் எடுத்து வீரரவிக்கு குறி வைத்தான். ”யாரும் என்னையோ, இளநங்கையையோ சூழ வேண்டாம்” என கூவினான். அப்போது இளநங்கையும் தன் இடுப்பிலிருந்த குறுவாளையும் வீரரவியை நோக்கி வீசமுற்பட்டாள். ஆனால் அதைப் பார்த்த வீரர்கள் அவளையும் நோக்கி தங்களின் வாட்களை குறி வைத்தார்கள்.
அதைப் பார்த்த வீரபாண்டியன் “இளநங்கை, நீ ஒதுங்கி விடு. இது எனக்கும் மன்னருக்கும் தனிப் போராட்டம்” என்றான். அதே சமயம் வீரர்கள் நெருங்குவதைக் கண்டவன் மன்னனையும் நோக்க அவனோ எதுவும் சொல்லாது சிரித்தான்.
இதனால் கோபம் அதிகமாக வீரபாண்டியன் “ஒரு பெண்ணைச் சுற்றி இத்தனை வீரர்களை நிறுத்திய நீயும் வீரனா?” எனக் கேட்டான்.
“ஏன் ஒருவனின் உயிரைப்போக்க இருவர் குறுவாளை வீச முற்பட்டால், என் வீரர்கள் என்னைக்காக்க வருவது தப்பா?” எனக் கேட்டபடியே “நீங்கள் இருவரும் உங்கள் வாட்களைக் கீழே போட்டுவிட்டு என்னிடம் சரனடையுங்கள். இல்லையேல் உன் காதலியின் உயிர் இருக்காது. அவளின் மார்புக்குக் குறிபார்த்து என்னுடைய குறுவாளும் உள்ளது பார்” எனக் கூறினான்.
அதைப் பார்த்த வீரபாண்டியன் “இளநங்கை நீயும் வாளைப் போட்டுவிடு” எனக் கூறி தன்னுடைய வாளையும் கீழே போட்டான். இளநங்கையும் அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் வாளையும் கீழேப் போட்டாள்.
உடனடியாக தன் பின்னால் நின்ற விரனைப் பார்த்து ‘இப்போது உன் வேலால் அவனைக் கொன்றுவிடு” எனக் கூறியதும் அதிர்ச்சியடைந்த இளநங்கை “இது மிக அநியாயம். மன்னனுக்கு அழகல்ல” எனக் கூறிக் கொண்டே வீரபாண்டியனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்யச் சொன்னீர்கள்? உங்களின் உயிருக்கு நீங்களே ஆபத்தைக் கொண்டு வந்து வீட்டீர்களே’ எனத்துடித்தாள். அதே சமயம் அவள் மயக்கம் அடைந்தும் சாய்ந்தாள். மயக்கம் அடையுமுன் தன் கையில் எடுத்த குறுவாளை வீரபாண்டியனை நோக்கி வேலைவீச முற்பட்டவனை நோக்கி வீசிவிட்டாள். அதனால் அந்த வீரனும் சாய்ந்தான்.
ஒரு வினாடியில் நிலை மாறிப்போனதை அவள் மட்டுமல்ல சேரனும் உணரவில்லை. வீரபாண்டியனின் இடுப்பிலிருந்த இராஜமுத்திரை சேர மன்னனின் தோளை முத்தமிட்டுக் கொண்டிருக்க அவன் தோளிருந்து குறுதி பெருக பெரியதாக அலறிக்கொண்டே கீழே விழுந்தான். மன்னனைப் பிடிக்க வீரர்கள் ஓடியதைக் கண்ட வீரபாண்டியன் அங்கிருந்த இரு விளக்குகளை அனைத்து விட்டு, திடீரேன்று பரவிய இருளில் வீரர்களின் கூச்சலைத் தொடர்ந்த்து தன் வாளைக் கொண்டு இருட்டில் கைபட்ட திசையில் ஒரு குறியின்றி வீசிக்கொண்டே இளநங்கையைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு வேகமாக ஓடினான்.
பின்னால் வீரர்கள் துரத்தும் பரபரப்பும், காலடி ஓசைகளும் குறைந்தபின், சிறிது நிதானப்பட்ட வீரபாண்டியன் தான் பொருனையாற்றின் கரையை நெருங்கிவிட்டதை உணர்ந்து இனி இளநங்கைக்கு மூர்ச்சை தெளிவிக்க, அவளைத் தன் மடிமீது அமர்த்திக்கொண்டு, அவளின் முகத்தைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, தன் கைகளினால் பொருனையாற்றின் நீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்தான். கலைந்த கூந்தலை கோதிவிட்டான். அவளின் சுந்தர முகத்தை நிலவொளியில் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் மலரத்தொடங்கின். அத்தகைய அழகிய முகம் சோர்வடைந்து, அதிர்ச்சியால் தளர்ந்து கண்கள் மூடிக்கிடந்தைக் கண்டு அவளின் இந்த நிலைக்குத் தானே காரணம் என்று உணர்ந்தவனின் மனமும் கலங்கியது. தான் அவளின் தகப்பனார் தடுத்தும் பிடிவாதமாக காமுகனென்று சேரநாட்டு மக்களாலேயே தூற்றப்பட்டவனான சேரமன்னன் வீரரவியிடம் இளநங்கையை அனுப்பியதும் அதனால் அந்த காமுகனின் காமக் கண்களுக்கு வெறியைத் தூண்டிவிட்டதையும் உணர்ந்தான். இனி அவளை சேரனின் கண்களில் படாமல் காப்பதும் தன் கடமையாகியதையும் உணர்ந்தான். அவனின் கைகள் அவளின் முகத்தையும் மெதுவாகத் தடவிக் கொடுத்தன. வீரபாண்டியனின் சிகிச்சைகளால் சிறிது தெளிவடைந்தவள் தானிருப்பது வீரபாண்டியனின் மடியே என உணர்ந்ததால் நாணப்பட்டு எழமுயற்சி செய்தாள். ஆனால் வீரபாண்டியனோ அந்தப்பூங்கொடித் தன்னை விட்டு விலகுவதை விரும்பாது தன் இரு கைகளால் அவளைச் சுற்றிக் கொண்டான். பிறகு மெதுவாக “நீ மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாய். அதனால் இன்னும் சிறிது நேரம் அப்படியே என் மடியில் இரு” என்றான். அவனின் இரு கைகளில் சிறைபட்டத் தன்னை விட அவனுக்கு மன மில்லை என்பதை உணர்ந்தவள் சிறிது கூச்சப்பட்டாலும், அவனின் ஆசையை மீற முடியாது நாணத்துடன் அசைந்தாள். பிறகு மெதுவாகத் தன் கண்களை அவனின் தோளிலும், மார்பிலும் செலுத்தினாள். அவளின் பார்வையைத் தொடர்ந்தவன் அவளின் மனத்தை புரிந்துகொண்டு, “என்ன பார்க்கிறாய்” என மெதுவாகக் கேட்டான்.
“உங்கள் மீது ஒரு வீரன் வேலைக் குறிவைத்தானே’ என அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படயிருந்ததைப் பற்றி கவலையுடன் வினவ, அவன் சிரித்துக்கொண்டே “நீ தான் உன் குறுவாளால் அவனைக்கொன்று என்னைக் காப்பாற்றிவிட்டாயே. எனக்கு ஏதும் ஆகவில்லை” எனக்கூறினான்.
‘எப்படி நீங்கள் தப்பமுடிந்தது. ஏதும் உதவி வெளியிலிருந்து வந்ததா?’ எனக் கேட்டவளுக்கு, “உன் உதவியைத் தவிர எனக்கு எதுவும் வரவில்லை. என்றான். அப்படியானால் நீங்கள் எப்படி அங்கிருந்து வரமுடிந்தது’ எனக் கேட்டுக்கொண்டே அவனின் மடியிலிருந்து எழுந்தாள்.
பண்பாடு காரணமாக அவளைத் தன் பிடியிலிருந்து மெதுவாக விடுவித்தான். தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தவனின் கைகளைத் தன் கைகளினால் பற்றிக்கொண்டு ஆவலோடு “என்ன நடந்தது என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கெஞ்சலொடு கேட்டாள்.
தாந்தான் அந்த அழகுச்சிலையை இருமுறை தொட்டோமே தவிர, முதன் முதலாக தானே முன்வந்து தன்னைத் தீண்டியதும், ஒரு பரவசம் தன் உடலில் பாய்ந்ததை உணர்ந்தான் யுவனான கொற்கைத் தலைவன் வீரபாண்டியன். அவனுக்கும் இதுவே முதல்பருவப் பெண்ணின் ஸ்பரிசம் என்றதால், சொல்லவொண்னா புதுவெள்ளம் அவன் உடலில் பரவியது. அவளைக் காதலொடு பார்த்துக்கொண்டே மெதுவாக “எனக்கு இம்முறை ஒருவகைத் தோல்விதான். என் மீது வாளை வீசியவனைவிட்டு, உன்னைத் தூக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து ஓடி வந்தது ஒரு வீரனுக்கு அழகல்ல. ஆனால் அந்த சமயம் உன் உயிரைக் கப்பாற்றுவதுதான் என் முதல் நோக்கமாயிருந்தது. அதனால் நான் வீரரவியின் தோளில் என் இராஜமுத்திரை பதித்த கோடரியை வீசி, அவன் கீழே வீழ்ந்ததைப் பார்த்தவுடன், அவன் வீரர்கள் அவனைப் பிடிக்கச் சென்றவுடன், பக்கத்தில் இருந்த இருவிளக்குகளைச் சாய்த்து அணைத்துவிட்டு, இருட்டில் கைபோனபடி என் வாளைவீசிக்கொண்டு, உன்னைத் தூக்கி என் தோளில் போட்டுக்கொண்டு ஓடி வந்துவிட்டேன். இது என் வீரத்துக்கு அழகல்ல. இந்த போரில் எனக்கு ஒரு பெரிய லாபமும். ஒரு நஷ்டமும் ஏற்பட்டது” என்றான்.
நடந்ததைப்பற்றி யோசித்துப் பார்த்தவளுக்கு, அவன் வீரத்திற்கு ஏற்பட்ட சோதனையும், அவனின் இராஜமுத்திரை அவன்வசம் விட்டு எதிரியின் வசம் சென்றது பெரிய நஷ்டம்தான் என்றும் உணர்ந்தாள். அதற்கு காரணம் தாந்தான் என்று தெரிந்ததும் அவள் மனமும் முகமும் மிகவும் வாடியது. மெதுவாக “உங்களின் நஷ்டம் பெரியதுதான். .முத்தைப் பற்றி ஏதும்தெரிந்தததா? எனக் கேட்டவளுக்கு “முத்துக் களவைப்பற்றி ஏதும் இந்தமுறை கண்டுபிடிக்க முடியவில்லை”. இது நம் பாண்டியநாட்டுக்கும், எங்களுக்கும் பெரிய பாதிப்புத்தான்.” என்றான் பாண்டிய இளவல்.
சிறிது நேரம் அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு கேட்டாள் ”நமக்கு ஏற்பட்ட இழப்பைச் சொன்னீர்கள். லாபத்தைப் பற்றி சொல்லாவில்லையே” என்று. கேட்டவளுக்குப் பதில் சொல்லாது அவள் முகத்தையே குறுகுறுவென்று பார்த்தான் சிறிது நேரம் முகத்தில் குறும்பு படர.
பிறகு அவளைப் பார்த்தபடியே “நம்முடைய இழப்பைப்ப்ற்றிச் சொன்னேன். அது எங்கள் தனிப்பட்டது. துன்பத்தைத் தனியாகத்தான் அனுபவிக்கனும். ஆனால் லாபம் என்பது என் ஒருவனுடையது அல்ல. அதை என்னுடன் பங்குகொள்ள ஒருவர் வேண்டும். அவரின் மனம் தெரியாது எப்படிச் சொல்லமுடியும்? அதனால்தான் சொல்ல யோசிக்கின்றேன்” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.
‘ஆனந்த்ததில் பங்கு கொள்ள யார்தான் யோசிப்பார்கள்” எனக் கேட்டாள். அவளின் பதிலைக் கேட்டவுடன் இளநங்கையைத் தன்னைனோக்கித் திருப்பினான் .ஆவலுடன். “அப்படியானால் என் லாபத்திலும் நீ பங்கு கொள்வாயா? என்று கேட்டவனைப் பார்த்து “ இந்த நிமிடம் வரை உங்களுடன் என்னைக் கூட்டிக் கொண்டு தானே வந்திருக்கிறீர்கள். இப்போதுமட்டும் ஏன் கேட்கீறீர்கள்” என மெதுவாகக் கேட்டாள்
அதற்கு அவன் “பாண்டிய நாட்டுப் பணிக்கு என் நாட்டு மக்கள் யாரையும் கூப்பிட இராஜகுடும்பத்தைச் சார்ந்த எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இது என் தனிப்பட்ட வாழ்க்கை. இதில் உன் சம்மதம் முக்கியம்” என்றான். அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த கோட்டைக் காவலன் மகளின் முகமும் மனமும் சந்தோஷத்தால் பரவசம் அடைந்தது. அதைப் பார்த்த வீரபாண்டியன் மனமும் முகமும் கண்களும் காதலால் மின்ன, மெதுவாகக் குனிந்து ரகசியமாக “லாபத்தைச் சொல்லவா?. என்றான். உம் என்ற ஒரு வார்த்தை மட்டும் அவளிடமிருந்து வந்தது. அவனின் கைகளோ புஷ்ட்டியாகவும், செம்மையாகவும், அந்திசூரியனின் ஓளியால் சிறிது மஞ்சள் நிறமும் கூடி மின்னிய இளநங்கையின் கன்னங்கள் இரண்டையும் பற்றிக்கொண்டன..
அப்போதும் ஒன்றும் சொல்லாமல் தன் கன்னங்களை கைகளால் பற்றிக் கொண்டு தயங்கியவனைப் பார்த்தவளின் கண்களும் “சொல்லுங்களேன்” எனக் கெஞ்சின. “எப்படி” என்றவனுக்கு .சிரித்துக்கொண்டே “எல்லாரும் எப்படிச் சொல்வார்களோ அப்படித்தானே சொல்ல முடியும். எல்லாரும் வாயால்தானே சொல்வார்கள்” எனப் பதிலும் சொன்னாள். ‘அப்படியானால் நான் என் வாயால் எப்படிச் சொன்னாலும் உனக்குச் சம்மதமா? எனக் கேட்டு சிரித்தான். அவளும் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே “சம்மதம்”. எனறாள். உடனேயே அவன் “சத்தியமாக” எனக் கேட்க அவளும் சிரித்துக்கொண்டே அவன் கையில் செல்லமாகத் தட்டினாள். தன் கையைத்தட்டிச் சத்தியம் செய்தவளை காதலுடன் பார்த்துக்கொண்டே மெதுவாக தன் உறுதியான உதடுகளால் அவளின் பவழத்தைப் போன்ற உதடுகளை மெதுவாகப் பற்றினான்.
பருவமடைந்தபின் முதன்முதலாக ஒரு யுவனின் ஸ்பரிசம் அவளை உணர்ச்சிவசப்படச் செய்தன. அளவிடமுடியாத நாணமும், இன்பமும் அவளை பரவசப்படச்செய்தன. சில நொடிகளுக்கு இருவரின் உதடுகளூம் இனைந்தேயிருந்தன. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட அறியசக்தியற்று இருவரும் தங்களுக்குள் ஒரு உலகில் உறவாடினர். இருவரில் முதலில் தன்நிலை அடைந்த வீரபாண்டியன் தன்னுடைய குறும்பால் முகம் முழுவதும் குங்கும நிறத்தில் பளபளவென மின்னிய வண்னமிருந்த இளநங்கையிடம் “என் லாபம் இந்தத் தங்கச்சிலைதான். உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? என்னுடன் வாழ்நாள் பூராவும் நிழலாகத் தொடர்ந்துவருவாயா” எனக் கனிவோடு கேட்டான். அவனின் அன்பின் வேகமும், கண்களில் தெரிந்த காதலும் அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு பதில் சொல்ல நாணப்பட்டு தன் தலையைச் சாய்த்து அவனை ஓரக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள். அவள் தன் வாயால் சொல்லாமல் சிரிப்பாலே தன் சம்மதத்தைச் சொன்னதைக் கண்டு உல்லாசமாக சிரித்துக் கொண்டே அவளை தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டவனின் அனைப்பும் அவளுக்குத் தேவையாகத்தான் இருந்தது.
2. வழக்கும் தீர்ப்பும்
தன்னை மறந்து, சுற்றுப்புறத்தையும் கவனிக்காமல் தன் அனைப்பில் கண்மூடி அமைதியாக இருந்த இளநங்கையைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை தோப்பின் எல்லையில் எழுந்த வீரர்களின் கூச்சலும் அவர்கள் ஓடிவரும் காலடியோசைகளும் சுற்றுப்புரத்தை பார்க்கச் செய்தது. ஆபத்து தொடர்வதை உணர்ந்து இளநங்கையை கைகளாலெழுப்பி உடனடியாக அந்த இடத்தைவிட்டு ஓடத் தொடங்கினான் வீரபாண்டியன்.. இருவரும் மிக வேகமாகவே பொருனையாற்றின் குறுக்கே ஓடினார்கள். அக்கரையை அடைந்து முத்தங்காடிக்குள் மறைந்தார்கள். அங்கிருந்த ஒரு கடைக்குள் சென்ற இளநங்கை அங்கிருந்த வாணிபப்பெண்ணைப் பார்த்து திகைத்தாள். முதல் நாள் முத்துக்கடையில் பெரிய முத்துமாலையைக் காட்டி “இதனைப் பார்த்துவிட்டுப் போ, இந்த மாலைகளெல்லாம் அரச மகளிர்தான் வாங்கமுடியும். உன்னால் முடியாது” எனத் தன்னிடம் திமிறாகப் பேசியவள் தான் அந்தப்பெண். அவள் நின்ற கம்பீரத்தையும், கொற்கைத் தலைவனைக் கண்டும் தலைகுனிந்து வணங்காதது மட்டுமல்லாது, தன்னையும் வீரபாண்டியனையும் பார்த்துச் சிரித்ததும் இளநங்கைக்கு அவள் யார். இங்கு என்னசெய்கிறாள் .அவள் இங்கிருக்கும் காரணம் என்னவாக இருக்கும் ”என்று பலவிதமான எண்ணங்கள் அவள் மனதில் ஓடத்தொடங்கியது. சிறிது நேரம் இளநங்கையைப் பார்த்துவிட்டு மெதுவாக அந்தப் பெண் இளநங்கையைப் சிறிது சிரிப்புடன் கேட்டாள், “இந்த ஆண்களுக்கு எப்போதும் எதிலும் நிதானமில்லையல்லவா இளநங்கை’ என்று. பிறகு வீரபாண்டியனைப் பார்த்து “இப்படியா இளநங்கையை பொருனையாற்றின் நீரில் இழுத்துக்கொண்டு வருவது. சுற்றிலும் சேரவீரர்கள் இருப்பதையும் மறந்து இத்தனைநேரம் தோப்பிலுட்கார்ந்திருந்தீர்களா? எனக்கேட்டுச் சிரித்தாள். அவளைத் தொடர்ந்தவனும் “ஆமாம். சிறிது நேரம் எங்களை மறந்துதான் இருந்துவிட்டோம்” என சமாதானம் சொல்லிக்கொண்டே வாணிபப்பெண்னணின் தோளில் தொங்கியப் புடவைத் தலைப்பைக் கொண்டு தன் தலையைதுவட்ட, அந்தப் பெண்ணும் தடையேதும் சொல்லாது தன்புடவையாலேயே அவன் தலையைத் துவட்டளானாள். அவன் அந்தப் பெண்ணிடம் மிகவும் உரிமைகொண்டடுவதும் அவளும் எந்த தடையும் சொல்லாது அவனுக்கு அனுசரனையாக இருப்பதைக் கண்டு அவர்களிருவரும் நன்கு பரிச்சயமானவர்கள் என்று புரிந்துகொண்டாள். தன்னைவிட அந்த வாணிபப்பெண்ணுக்கு இளவரசனிடம் உரிமை அதிகமோ என்ற அச்சமும் அதனால் கோபமும் ஏற்பட்டது. தானிருப்பதையும் லட்சியம் செய்யாது அவர்கள் சகஜமாகப் பழகுவது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் அங்கிருப்பது தனக்குச் சங்கடமாகும் என்றுணர்ந்தவள் தலையைக் குனிந்து கொண்டே, மெதுவாக இளவரசரிடம் “எனக்கு உத்திரவு கொடுத்தால் நான் என் வீட்டிற்குப் போகிறேன்:. எனக் கூறினாள்.. அதற்கு அந்தப் பெண் அவளை நோக்கி “நீ எப்படிப் போகமுடியும். உன் வீட்டில் உன்னைக் கட்டாயம் சேரவீரர்கள் தேடுவார்களே. இனி உன் வீடும் உனக்குப் பாதுகாப்பு இல்லையே இளநங்கை’ எனக்கூறி, வீரபாண்டியனைப் பார்த்து ‘இதுவரையில் அவளிடம் நீங்கள் நம் திட்டத்தைச் சொல்லவில்லையா? தோப்பில் பின் இத்தனைநேரம் என்னதான் பேசிக்கொண்டிருந்தீர்கள்” எனக் கேட்டுச் சிரித்தாள். ஆனால் வீரபாண்டியனோ அந்தப்பெண்ணைப் பார்த்து “நான் என்ன பேசியிருப்பேன் என்று உனக்குத் தெரியாதா? என்றுகூற இருவரும் சிரிக்கத்தொடங்கினார்கள். அந்த இருவரின் நெருக்கத்தால் அச்சமும் கோபமும் கொண்ட, இளநங்கையோ அந்தப் பெண்ணைப்பார்த்து ‘அவர் தோப்பில் என்னுடன் என்னபேசினார் என்பதெல்லாம் உனக்குத் தெரியவேண்டிய அவசியம் என்ன? நீ யார் என்னைப்பற்றிக் கேட்க” எனக் கோபமாகவே கேட்க அந்தப் பெண்ணோ சிறிதும் கலங்காது :நான் யார் என்று இன்றுவரையில் உன்னிடம் அவர் சொல்லவில்லையா?’ என்று கேட்டுச் சிரிக்கத் தொடங்கியவளை தடுத்த இளநங்கை வீரபாண்டியனைப் பார்த்து “இந்த வாணிபப்பெண்ணுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்னைப்பற்றி மரியாதைக் குறைவாக பேசவோ, சிரிக்கவோ அவளுக்கு யார் உரிமை கொடுத்தது. நீங்களா? என்று கோபமாகவே கேட்டாள். அதைப் பார்த்த வீரபாண்டியன் “முத்துக்குமரி இனியும் விளயாடினால் இளநங்கையால் தாள முடியாது. போறும். நீயேசொல் நம் இருவருக்கும் என்ன உறவென்று’. என்றான். அதற்கு அந்தப்பெண்ணோ “நான் ஏன் சொல்லவேண்டும். உங்களிடம்தானேக் கேட்டாள். நீங்களே சொல்லிவிடுங்கள்” என்ற் பதிலுக்குச் சாட, பொறுமையிழந்த இளநங்கையோ :உங்கள் விளையாட்டுக்கு நான் என்ன பகடைக் காயா?. நீங்களாகச் சொல்லாவிட்டாலும், உங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்காது என்பது எனக்குப் புரிகிறது’ எனக் கூறிவிட்டு வாசற் கதவை நோக்கிப் போனாள். தங்களின் விளையாட்டு எல்லை மீறிப் போய் இளநங்கையின் மனத்தை மிகவும் வதைத்ததை இருவரும் புரிந்து கொண்டதால், முத்துக்குமரி “இளநங்கை தயவு செய்து நான் சொல்வதை கேள். நானே எங்களின் உறவைச் சொல்லிவிடுகிறேன். நீ நினைப்பதுபோல் எங்கள் உறவு தப்பானதல்ல. நான் ஒரு வகையில் அவரின் மகளாவேன். எனக்கும் அவருக்கும் உள்ளது தூய்மையான “தகப்பனார்—மகள்” உறவுதான். இது நம் பாண்டியநாட்டு மக்களுக்கும் தெரியும்’ என்றாள். அப்போதும் நம்பாத இளநங்கை இருவரையும் பார்த்து “உங்கள் உறவு எதுவானாலும், எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு இனி இங்கு எந்தபணியும் இல்லை. நான் போகிறேன்’ எனச் சொல்லிவிட்டுத் திரும்பினாள். ஆனால் அவளைத் தடுத்த வீரபாண்டியன் கோபமாக “இளநங்கை, நீ என்னிடம் தோப்பில் செய்த சத்தியம் அவ்வளவுதான? இப்படி நீ புரிந்து கொள்ளாமல் போக நான் விடமாட்டேன். நான் சொல்கிறேன் அவள் என் மகள்தான். இது புனிதமான உறவுதான் இது உன் தகப்பனாருக்கும் நன்றாகத் தெரியும். நாங்கள் உன்னிடம் சிறிது விளையாடினோம். என்னை நம்பு’ என்றவனையும் இலட்சியம் செய்யாது போகத் துடித்தவளை முரட்டுத்தனமாகப் பிடித்து நிறுத்தினான். அப்போதும் கோபம் குறையாதவள் “போதும் போதும் நீங்கள் இதுவரை என்னிடம் நடித்தது. இனியும் உங்கள் பொய்யை நான் நம்பத் தயாரில்லை. நீங்களும் பொய்யர். அவள் உங்கள் மகள் என்பதும் பொய்யே’. என்றும் உறுதியாகச் சொன்னாள். வீரபாண்டியனோ முத்துக்குமரியைப் பார்த்து இவளுக்கு எப்படிப் புரியவைப்பது?’ எனக் கேட்க அவளோ இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே “இது உங்களிருவர் பிரச்சினை. நான் கடைக்குப் போகிறேன். நீங்கள் இளநங்கைக்குச் சமாதானம் செய்து புரிய வையுங்கள்’ எனக்கூறி வெளியேப் போய்விட்டாள்.
தனியே விடப்பட்டதும் அவளைநெருங்கி தன் கைகளால் அவளைச் சுற்றி அணைத்துக் கொண்டு ‘இளநங்கை. புரியாமல் கோபம் கொண்டு என்னைத் துடிக்க வைக்கிறாயே. இந்த நிமிடம் வரை வீரபாண்டியனை நோக்கித் தலையை நிமிர்த்து “பொய்யன்” என்று மரியாதைக் குறைவாக யாரும் சொன்னதுமில்லை. சொல்லிவிட்டு உயிருடன் இருந்ததும் இல்லை. நான் உன்மீது கொண்டக் காதலே நீ என்னைப் பார்த்துக் கையைநீட்டி பொய்யன் எனச் சொல்லி எதிரில் தலைநிமிர்த்தி நிற்பதையும் பார்த்து. என்னைப் பொறுமையாக இருக்கச் செய்கிறது. எனக்கு யாரிடமும் நடிக்கவோ, பொய் பேசவோ அவசியமில்லை. முத்துக்குமரி என் மகள் தான் என்பதில் எந்தவிதமான பொய்யோ ஏமாற்றமோ இல்லை. இது எங்கள் தாயான தேவி மீனாட்சி மீது ஆனை” என உறுதியான குரலில் சொன்னான்.
அப்படிச் சொல்லியும் அவள் மனம் சமாதானமடையாது இருப்பதைப் பார்த்து மனம் கலங்கியவன் ‘இனியும் நீ என்னை நம்பவில்லையென்றால் நீ என்மீது கொண்டது தூய்மையான காதலில்லை” என்றான். அவனைப் பார்த்து “அப்படிச் சொல்லி என்னைக் கொல்லாதீர்கள். என் புனிதமானக் காதலை கடுகளவும் சந்தேகப்படுவது உங்களுக்கு அழகல்ல. அதற்குப்பதில் உங்கள் கைகளினால் என் மூச்சை நிறுத்திவிடுங்கள்” என்று கதறித் துடித்தவளை, ‘அப்போது நீ மட்டும் என்னைச் சோதிக்கலாமா” எனக் கேட்டான்.
“நீங்கள் முத்துக்குமரியை உங்கள் மகள் எனச் சொல்வதை எப்படி ஏற்பது. அவள் வயதும் உங்கள் வயதுமே சொல்லுமே நீங்கள் சொல்லுவது நம்பத் தக்கதல்லவென்று’ என்றாள்.
அவளைப் பார்த்து ‘ஏன் அவள் வயதில் எனக்கு மகள் இருக்கக்கூடாதா. மேலும் அவள் எனக்குப் பிறந்தால்தான் என் மகளாவாளா? மூத்தவருக்குப் பிறந்தால் எனக்கும் மகள்தானே” என்று நிதானமாகச் சொன்னவனைப் பார்த்து திகைத்துப் போய்விட்டாள் இளநங்கை. பிறகு மெதுவாக “அப்படியானால் பாண்டியமன்னரின் மகள் ஒரு சாதாரண வாணிபப் பெண்போல் முத்தங்காடியில் வாணிபம் செய்வதா. அதுவும் இப்போழுது நம் நாட்டைச் சுற்றி சேரனின் வீரர்கள் இருக்கும் இந்த நேரத்தில். இது முறையா?’எனக் கேட்க “ஏன் பாண்டிய இளவரசன் முத்துக்களவைக் கண்டுபிடிக்க ஒரு ஒற்றனாக வரும்போது இளவரசி மட்டும் வரக்கூடாதா. என்பது என் அண்னனின் எண்ணம். இதற்கு யாரும் தடைச் சொல்லக்கூடாது. இது பாண்டிய மன்னரின் ஆணை. மீறக்கூடாது” என்றான்.
அப்போதுதான் தான் முன் யோசனையின்றி அவர்கள் சொன்னதைப்பற்றி அவர்களிடமே விளக்கம் கேட்டு தெளிவுபடுத்திக்காமல் அவசரப்பட்டு இருவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உணராமல் கோபப்பட்டதையும் வாதாடினதையும் நினைந்து வெட்கப்பட்டு வீரபாண்டியனின் முகத்தைப் பார்க்கவும் தனக்கு அருகதையில்லை எனத் தன் தலையைக் குனிந்து கொண்டாள் இளநங்கை. வெடிவாணம்போல் படபடாவென்று வார்த்தைகளைக் கொட்டியவள் பேசவும் ஏன் தன்னைப் பார்க்கவும் அஞ்சி தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து தன் மனம் கலங்கினாலும். மேலுக்குக் கோபம் தீராவதன்போல் அவளிடம் கோபமாகக் கேட்கத்தொடங்கினான். கொற்கைத் தலைவன் வீரபாண்டியன். “உனக்கு ஏன் இத்தனைக் கோபம்? இந்த குணம் பெண்ணுக்கு அழகா? இப்போது நீ பேசினதை என் அண்ணன் கேட்க நேர்ந்தால், உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? நீ கோட்டைக்காவலன் மகள் என்றோ என் அன்பிற்கு உரியவள் என்றோ நான் என் கடமையை புறக்கனிக்க முடியாது. அதனால் உனக்கு என்ன தண்டனை தகும் என நீயே சொல்” எனச் சொன்னான்.
அவன் முகத்தைப் பார்த்தவள் அதில் காணப்பட்ட கோபத்தைப் பார்த்ததும் பயத்தால் உடல் நடுங்கினாள். பின் மெதுவாகக் குனிந்து அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் அவன் பாதங்களில் விழுந்ததை உணர்ந்தவனின் மனமும் கலங்கியது. அவளைப்பரிவுடன் தன் கைகளினால் தூக்கினான். “தவறு உன் மீது மட்டுமல்ல. உன் தகப்பனாரின் மீதும் உண்டு. அவர் உனக்கு பெரியவர்களிடமும் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் எப்படிப் பழகுவது என்று சொல்லிக்கொடுக்கவில்லை.” எனக் கூறினான். அதைக் கேட்டவள் உடனடியாக “நான் தான் தவறு செய்தவள். என் அப்பா பலமுறைகள் சொல்லியிருந்தும் நாந்தான் அதைபற்றி கருத்தில் கொள்ளாது என் பிரியப்படி நடந்துகொண்டேன். அவர் சொல்லைக் கேட்காதது என் குற்றமே. எப்போதும் சொல்வார் என்னிடம். எனக்குப் மரியாதையுடன் பேசவொ, நிதானமாக யோசித்துப் பேசவொத் தெரியாமல் எப்பவும் எல்லாரிடமும். வாயாடுவதுத் தவறேன்று. அதன் பலனை இன்று புரிந்து கொண்டேன். என்னை தயவுகொண்டு மன்னித்து விடுங்கள். இனி ஒருமுறை இப்படி நடந்து கொள்ளமாட்டேன்.” எனப் பணிவோடு கூறினாள்.
‘உன் தவறை நீ உணர்ந்து கொண்டது நல்லதே. ஆனால் வீரபாண்டியனின் ஆட்சியில் தவறு செய்தவர் யாராயிருந்தாலும் தண்டனை உண்டு. உனக்கு என்ன தண்டனை தகும் என நீயேசொல்.என்று தீவிரமாகக் கூறினான்.
“குற்றம் புரிந்தவள் நான். நீங்கள் என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. உங்கள் தண்டனைக்குக் கட்டுப்படுகிறேன்” எனக் குனிந்துகொண்டே சொன்னாள்.
“அதுதான் சரி. நீ இரு தவறுகளைச் செய்திருக்கிறாய். இரண்டுக்கும் தனித்தனியாகத் தண்டனை உண்டு. முதலில் உன் அப்பா சொன்னதைக் கேட்காததும் உன் இஷ்டப்படி வார்த்தைகளைக் கொட்டியதும். அதற்கு முதல் தண்டனை துடித்த உன் வாய்க்குத்தான். அடுத்ததாக அரசமகளைப் பற்றி முறையின்றி பேசியதற்கு. முதல் தண்டனை இப்போழுதே நிறைவேற்றப்படும். இரண்டாவது தண்டனையில் ஒரு நிபந்தனை உண்டு. அதை பிறகு சொல்கிறேன். தண்டனையை ஏற்றுக்கொள்ள சம்மதமா” என்று சொல்லிக்கொண்டே தன் இரு கைகளினால் அவளின் பூ போன்ற முகத்தைத் தூக்கிக்கொண்டான். தன்னுடைய முகத்தை அவளின் முகத்துக்கு நெருக்கமாகக் கொண்டு சென்று தன் உதடுகளால் அவளின் இதழ்களின் மீது மெதுவாகத் தன் அன்பு முத்தங்களைப் பதித்தான். இதுதான் என்னுடைய வாழ்னாள் பூராவும் இனைபிரியாது என்னுடன் இருப்பவளுக்கு நான் அளிக்கும் முதல் அன்புத் தண்டனை”எனச் சொல்லிச் சிரித்தான். அவனின் அன்பினால் சிறிது மனம் தெளிவுபெற்றவள் அவனைப் பார்க்க வெட்கப்பட்டாள்.
மெதுவாக இரண்டாவது தண்டனை என்னவென்று புரியாது காத்திருந்தாள். அவனும் கனிவுடன் அவளைப் பார்த்து “இரண்டாவது தண்டனையில் உள்ள நிபந்தனை அதை ஏற்றுக் கொள்ள நீ முழு மனதுடன் தயாராக வரவேண்டும். நீ சம்மதப்படவில்லை எனில் அந்தத் தண்டனையை உனக்கு அளிக்க என்னால் முடியாது”. என்றான். அப்படி என்னவாக இருக்கும் என அவளால் ஊகிக்கமுடியவில்லை. குழப்பத்துடன் அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
வீரபாண்டியனும், தான் இத்தனை நேரம் பொய்யாகக் காட்டிக் கொண்டிருந்த கோபத்தை விட்டுவிட்டு “என் மகளை நீயும் உன் மகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவள் என் குழந்தையாக இருக்க முடியாது என்பதற்கு வயதைக் காரணம் சொன்னாய். அதனால் எனக்கு நீ என் வாரிசை உன் இந்த மணி வயிற்றில் தாங்கி, பெற்று, உன் மார்பமுதம் தந்து தாயாக வேண்டும். இது நீ முழு மனதுடன் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.” இது என் இரண்டாவது தண்டணை. இது தக்கக் காலம் வரும்போது நிறைவேற்றப்படும்”. உனக்கு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மனமுண்டா” எனக் காதலோடு அவளின் காதில் கேட்டான். அவளும் மிக்க பரவசத்துடனும், தாளமுடியாத நாணத்துடனும் அவனைத் தன் ஓரக் கண்களால் பார்த்து தன் தலையை அவன் உறுதியான மார்பில் சாய்த்துக் கொண்டாள். அவனும் அவளை ஆனந்தத்துடன் அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் தன்னை மறந்திருந்தவள் மெதுவாகத் தன் தலையைத் தூக்கி “உங்கள் ஆட்சியில் இப்படித்தான் தண்டனை வழங்குவீர்களா? என சிரித்துக்கொண்டே கேட்டவளைப் பார்த்து “என் ஆட்சியில் இராஜியச் சபையில் வழங்கும் தீர்ப்பு வேறுமாதிரிதான். ஆனால் இது என் அந்தப்புரவழக்கு. இதில் தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் எனக்கு மட்டும்தான் உண்டு. இங்கு என் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்” என்று உல்லாசமாகச் சிரித்தான்.
சிரிப்பைத் தொடர்ந்து வந்தது முத்துக்குமரியின் குரலும் அவள் உருவமும். “என்ன சிறியதந்தையே, சந்தேகம் போய் சல்லாபம் ஆரம்பித்துவிட்டதா?. இனி எங்கள் பணி என்னவென்று சொல்வீர்களா? எனக் கேட்டாள். அவளைக் கண்டதும் இளநங்கை அவளின்முன் தலை குனிந்து வணங்கி “இளவரசியார் என்னை மன்னிக்கவேண்டும்.” என்றாள். அவளைத் தடுத்த முத்துகுமரி “நம் இருவருக்குமிடையில் எந்த வித்தியாசமும் வேண்டாம். நாம் நல்ல தோழிகளாகவே இருப்போம். அதைத்தான் என் சிறியதந்தை விரும்புவார்.” எனக் கூறி அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு வீரபாண்டியனைப் பார்த்து “பொறாமையாக இருக்கிறதா” எனக் கேட்டுச் சிரித்தாள். அவளின் சிரிப்புடன் சேர்ந்து இருவரும் நகைத்தனர்.
3. ஊடலும் கூடலும்
தான் சிங்கனனின் ஒற்றர்படையால் தலையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபடாவிட்டாலும், தன் உப தலைவியான இளநங்கையை முன்னிருத்தி, சிங்கனனின் குள்ளநரித்தனமானதும், முறையற்றதுமான போர்த் திட்டங்களை தன் புத்தியாலும், தன் ஆசானும் மூத்த சகோதரருமான பாண்டிய மன்னர் சுந்தரராஜ பெருமானாரினிடம் கற்ற போர்முறைகளாலும் முறியடித்துவிட்டு, தன்னுடைய அடுத்தப் போர் பாண்டிய சாம்ராஜியத்தின் அஸ்திவாரமாக சேரநாட்டின் தலைநகரில் நடத்தப்படும் என்றும் உறுதியாகச் சொல்லி தன் அரச தர்பாரை விட்டுத் தன் அந்தப்புர மாளிகைக்கு கிளம்பினான் வீரபாண்டியன்.
தன் இராஜ மண்டபத்தை விட்டு எழுந்தவன் மனதில் தன் மனைவியும் தன் வாழ்வில் சகல விஷயங்களில் சமபங்கு கொண்டு, தான் கூப்பிட்ட உடனேயே தன்னைத் தொடர்ந்த இளநங்கையின் எழில் வதனம் சிரித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இளநங்கையைத் தனிமையில் சந்திக்கவும், அவளுடன் மனம்விட்டு உல்லாசமாக இருக்கவும் வேகமாகத் தன் பள்ளியறைக்கு வந்தான் வீர பாண்டியன். அங்கும் அவன் ஆசைப்படியே இளநங்கை பள்ளியறையின் சாரளத்தின் வழியாக வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள். கதவை மூடும் சப்தத்தையோ, வீரபாண்டியன் உள்ளே வந்ததையோ அவள் உணரவில்லை. அவள் முகத்தில் ஒரு கலக்கமும் இருந்தது. உள்ளே வந்தவன் ஓசைப்படாமல் அவளின் பின்புறம் நெருங்கினான். அவன் கைகள் அவளின் வழவழத்தத் தோள்களைப் பற்றியது. ஆனால் இளநங்கையோ எந்த உணர்ச்சியும் காட்டாது சிலைபோலவே நின்றிருந்தாள்.. இந்த நிலை அவன் எதிர்பார்க்காதது. ஒரு வினாடி காரணம் புரியாது நின்றான். பிறகு மெதுவாக “இளநங்கை” எனக் கூப்பிட்டான். அவனின் அழைப்பும் அவள் நிலையை மாற்றவில்லை. இந்த நிலைக்குக் காரணமும் அவனுக்குத் தெரியவில்லை.
சிறிது வினாடிகள் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு அவளின் கவனத்தைத் திருப்ப தங்களிருவருக்கும் இடையில் நடை பெரும் சல்லாபமான விளையாட்டைத் துவக்கினான். வழக்கம்போல் தன்னுடன் தனித்து சரசமாடுபவளின் கன்னத்துடன் தன் கன்னத்தைச் சேர்த்து வைத்து, தன் உதடுகளினால் அவளின் மென்மையான காதின் மடல்களைத் தன் பற்களினால் பற்றிக் கொண்டு, தன் உஷ்ணமான மூச்சுக்காற்றை அவளின் காதுக்குள் செலுத்தினான். அப்படிச் செய்யும்போதெல்லாம் அவளின் உடம்பில் ஒரு கூச்சம் ஏற்பட அந்த கூச்சத்தினால் அவள் செல்லமாகச் சிணுங்குவாள். அவளின் அந்தச் செல்லச் சிணுங்கல் அவனுக்கு அதிக இன்பத்தைக் கொடுக்கும். அவனின் விளயாட்டும் எல்லைமீற, அவளும் காதலோடு இரசிப்பாள். ஆனால் அப்படி எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிபடுத்தாமல், நிலைமாறாது கல்போல் நின்றாள் இளநங்கை.
குழப்பத்துடன் அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டு “ஏன் இப்படியிருக்கிறாய். உன் உடல்நிலை சரியில்லையா? உன் மனதில் என்ன கலக்கம், என்னிடம் சொல்லம்மா” என இதமாகக் கேட்டான் வீரபாண்டியன்.. அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது தன் தலையைக் குனிந்து கொண்டாள் இளநங்கை. .குழப்பம் தீராதவன் அவளைத் தன் மார்புடன் அணைத்துக்கொன்டு மெதுவாக அவளின் கன்னங்களையும், பவழ உதடுகளையும் தன் கைகளினால் தடவியபடியே “உன் மௌனம் என்னை மிகவும் பாதிக்கிறது. உன் இந்த நிலைக்குக் காரணம் என்ன?. இங்கு யாராவது உன்னிடம் மரியாதையின்றி நடந்துகொண்டார்களா? நம் வீரர்கள் உன்னிடம் மிக்க பரிவும் அன்பும் கொண்டவர்கள்தானே. நீ என் மனைவி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே. அதனால் அவர்கள் யாரும் உன் மனம் நோக நடக்கமாட்டார்களே. வேறு என்னவாக இருந்தாலும் என்னிடம் மனம்விட்டுச் சொல்” எனப் பரிவுடன் இதமாகவே கேட்டான். தன் கண்களைத் தூக்கி அவனைப் பார்த்தவள் மெதுவாக “என்னை கொற்கைக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்” என மட்டும் சொன்னாள்.
இதைக் கேட்டவன், “தீடீரேன்று இப்போது கொற்கையின் நினைவு ஏன் வந்தது. உன் பெற்ரோரைப் பார்க்க வேண்டுமா?” . இப்போதுதான் நாம் முதல் வெற்றியை அடைந்துள்ளோம். இன்னும் இங்கு செய்ய வேண்டியவைகள் நிறைய இருக்கிறதே. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள். மன்னரிடமிருந்து அடுத்தப் போர் எந்த இடத்தில், எப்படி என்ற திட்டம் வரும். அப்படிப் போருக்குப் போகுமுன் நாமிருவரும் சேர்ந்தே கொற்கைக்குப் போய் உன் தந்தையைப் பார்க்கலாம் என குழந்தைக்குச் சொல்வதுபோல் சொன்னான். ஆனால் அவனின் எந்த சமாதானமும் அவள் மனதை தொடவில்லை. அவனுக்குப் பதிலாகச் சொன்னாள் வீரபாண்டியனின் மனைவி. “பிரபு, நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
நான்மட்டும் தான் கொற்கைக்குப் போக உங்களிடம் உத்திரவு கேட்டேன்’.
.. இதைக்கேட்டவனோ திடுக்குற்று அவளைப் பார்த்தான். பார்த்தவன் பார்வையில் கோபமும், குழப்பமும் தெரிந்தது. குரலும் கடுமையாகியது. “நீ. உன் திட நினைவுகளுடன்தான் பேசுகிறாயா? யாரிடம் பேசுகிறாய், என்ன பேசுகிறாய் என்று யோசித்தாயா?’ எனக் கேட்டான். கணவனின் கோபத்தை உணர்ந்தவள், குனிந்த தன் தலையை உயர்த்தாது மெதுவாக “உங்களிடம் தான் பேசுகிறேன். என் சுய நினைவுகளுடந்தான் பேசுகிறேன். நான் வந்தபணி முடிந்து விட்டது. இனி உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம். இனி பகலிலும், இரவிலும் என் தொந்திரவு இருக்காது. நீங்கள் உங்கள் விருப்பப்படியே எப்போதும் யாரிடமும், எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். என்னால் எந்த தலையீடும் இருக்காது” என்று குரல் மங்க உள்ளத்தின் வேதனை பெரும் விம்மலாக வெடிக்கச் சொன்னாள்.
அவள் இத்தனை நேரமும் தன் முகத்தைப் பார்க்காது தலையைக் குனிந்து கொண்டே பேசியதை அப்போதுதான் கவனித்தான். சட்டென்று அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. தான், போரின் தீவிரத்தால் அடுத்தடுத்து பல உத்திரவுகள் போட்டு அவளுக்குச் சிறிதும் ஓய்வு கொடுக்காமலிருந்ததையும் அதே சமயம் அவளிடம் அதிக விஷயங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவாதிக்காமல் இருந்ததையும் யோசித்துப் பார்த்தான். அதனால் அவளின் மனம் கலங்கி மிக்க வேதனையுடன் இருப்பதையும் உணர்ந்தான். அவளின் கோபம் நியாயமானதுதான் என்றும் புரிந்துகொண்டான். இப்போது அவளைச் சமாதானப்படுத்துவதுதான் தன் முதல் பணியென்றும் தீர்மானம் கொண்டான். இந்த எண்ணங்களால் தெளிந்தவன், தன்னருகிலிருந்தவளை இன்னும் கைகளால் இருக்க அனைத்துக் கொண்டான். மெதுவாக, ‘இளநங்கை, உன் வருத்தம் நியாயம்தான். சிறு வயதிலிருந்தே போர் என்று வந்துவிட்டால் நான் என் தீர்மானங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டேன். நான் ஒருவருக்குச் சொல்லும் உத்திரவுகளை அடுத்தவர் அறிந்து கொள்ளவும் அனுமதிக்க மாட்டேன். நான் யாரிடம் பேசவேண்டுமென்று முடிவு செய்வது, எப்போது, எப்படிப் பேசவேண்டும் என்பதும் என் முடிவுதான். இதில் என் மன்னர்கூட தலையிடமாட்டார். இதனால் நான் சில சமயங்களில் என் பணியாட்களிடம் தனிமையில் பேசியிருக்கிறேன். எந்த விஷயங்கள் உனக்குத் தெரியவேண்டுமோ அவைகளை மட்டும்தான் நான் உன்னிடம் சொல்லியிருப்பேன். இதனால்தான் நீ என் மீது வருத்தப்பட்டாயா?. என் குணம் அத்தன்மையானது. என்னுடன் வாழவந்திருக்கும் நீ என் குணத்தையும் புரிந்துகொள்வது அவசியம்” எனப் பரிவாகச் சொன்னான். அவனின் சொற்களைக் கேட்டவள் அப்போதும் தன் தலையைத் தூக்கவில்லை. ஆனால் மெதுவாக “நானும் என் தகப்பனாரின் பணிமூலம் போரின் முக்கியத்தையும் அவற்றை செயல்படுத்தும்போது அதனை நடத்துபவர்களின் பொறுப்புக்களையும் அதன் இரகசியங்களைக் காக்கும் தன்மைகளையும் அறிந்தவள்தான். போர்பற்றி நடக்கும் விவாதங்களையும் அதை இரசியமாகக் காக்கவேண்டிய வழிகளையும் அறிந்தவள்தான். நீங்கள் அதுபற்றி செய்தவைகளை நான் எப்போதும் தவறாக நினைத்தவள் அல்ல.அதனால் என் மனம் கலங்கவில்லை. எனக்கு இனி இங்கு பணி எதுவுமில்லை. எனக்கு உங்கள் சந்தோஷத்தைத் தவிர எதுவும் முக்கியமல்ல. இங்கேயேயிருந்து உங்கள் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுக்காமல் நான் என் தந்தை வீட்டில் உங்களின் நினைவுகளுடனே இருந்து விடுவேன். அதனால்தான் என்னை அனுப்பிவிடுங்கள் என உங்களைக் கெஞ்சுகிறேன்” என்றாள். அப்போதுதான் தன் மனைவியின் மனத்தில் தான் அறியாத ஒரு கலக்கம் இருப்பதையும், அதைபற்றி தன்னிடம் எதுவும் சொல்லாமல், தான் மட்டும் விலக முடிவு செய்துவிட்டாள் என்றும் புரிந்து கொண்டான். அவளின் துன்பத்திற்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை மட்டும் அவனால் ஊகிக்க முடியவில்லை
பஞ்சனையைவிட்டு எழுந்த வீரபாண்டியன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு “இளநங்கை இப்படி வா” எனக் கூப்பிட்டான். முதலில் வரத் தயங்கியவள் மெதுவாக வந்தாள். தன் எதிரில் நின்றவளைப் பார்த்து பரிவாகக் கேட்டான். “உன்னால் என்னை பிரிந்து கொற்கையில், என் நினைவு இல்லாமல் தனிமையில் சந்தோஷமாக நிம்மதியாக வாழமுடியுமா? என்று. அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றவளின் முகத்தை தன் கைகளினால் தூக்கி அவளின் கண்களைத் தன் கண்களினால் உற்றுப் பார்த்தபடியேச் சொன்னான் “உன்னால் பதில் சொல்ல முடியாது. எனக்குத்தெரியும் உன் மனசு. உன்னால் என் நினைவின்றி இருக்கமுடியாது. என்னால் மட்டும் நீ இல்லாத இந்த மாளிகையில் ஆனந்தமாக இருக்கமுடியுமா? தீடீரென்று இந்தமாதிரி ஒரு எண்ணம் உனக்கு ஏன் வந்தது? என் அன்பில் என்ன சந்தேகம், எப்படி வந்தது? சொல்.” எனக் கேட்டான்.
ஆனால் அவனின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது அவள் தவித்துத் தன் கண்களை அவனின் கூரிய பார்வையிலிருந்து திருப்பமுயன்றாள். அவளின் கண்களின் தயக்கத்தைப் பார்த்தவன், “நீ எது சொல்ல விருப்பப்படடாலும் என் கண்களைப் பார்த்தேச் சொல்.” என்றான்.
அப்போதும் அவள் ஏதும் சொல்லாமல் தவிப்பதைப் பார்த்தவன் “எனக்குப் புரிகிறது. என் கண்களைப் பார்த்தபின் உன்னால் என்னிடம் எதையும் மறைக்கமுடியாது. உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் யோசிக்காமல் சொல். நான் தீர்த்து வைக்கிறேன்”.
அதற்குமேல் தான் ஏதும் பேசாதிருந்தால் அவனின் கோபம் அதிகமாகும் எனப் பயந்தவள் “நானும் நீங்கள் சொன்னபடியே என்னைப்பிரிந்து உங்களால் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கமுடியாது என்ற நினைப்பில் இறுமாப்புடன்தான் இருந்தேன். ஆனால் போருக்கு சில நாட்களுக்குமுன் ஒருநாள் என்னை “வேல்விழி” என அழைத்து இந்தக் கோட்டையைப் பெண்ணாக நினைத்துக் கொள்ளச் சொல்லியும் எதிரி முறை தவறி நடந்தால், கோட்டைப் பெண் எதிரியைத் தன் வலது கையால் ஓங்கி அறையட்டும் எனச் சொல்லி, என்னைக் குழப்பத்துடன் வெளியே அனுப்பினீர்கள். அன்று இரவு நான் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு உங்களிடம் சில விபரங்களைச் சொல்ல வந்தேன். ஆனால் அப்போது தான் கேட்டச் சொற்கள் என்னையும் என் வாழ்வையும் அப்படியே சிதைத்துவிட்டது பிரபு. உங்கள் இதய சாம்ராஜியம் எனது தனிக் கோட்டையென்று மாளாத பெருமையுடன் இருந்தேனோ அப்படிப்பட்ட தாங்கள் அந்த இரவில் வேறு ஒரு பெண்ணிடம் உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் சம்பாஷனையிலிருந்து அந்தப் பெண்ணும் உங்களின் அன்புக்குப் பார்த்திரமானவள் என்று உணர்ந்தவுடன் நான் அந்த வினாடியே செத்துவிட்டேன். அதற்குப் பிறகு உயிரிருந்தும் உணர்வற்ற நடைபிணமாகத்தான் இருந்து வருகிறேன்... இப்போதுதான் போர் முடிந்து, பாண்டியப் பேரரசு வெற்றிப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டதே. இனி எனக்கு இங்கு எந்தப் பணியும் இல்லை. உங்களுக்கும் நான் தேவையில்லை. அதனால்தான் நான் வந்த வழியேச் செல்ல முடிவு செய்தேன்” எனத் துக்கம் தாளாது கண்ணீர் பொருனையாற்று நீரெனப் பெருக இதயமே உடைந்துவிட்டவள்போல் விம்மினாள். துக்கம் தாளாது கண்களில் நீர் பெருக விம்மியவளைத் தன் மார்ப்புடன் சேர்த்தனைத்துக் கொண்டவனின் உதடுகள் அவளின் கதுப்புக் கன்னங்களில் வழிந்த நீரை ஒத்தியெடுத்தன.. சில வினாடிகள் இருவரும் ஏதும் பேசவில்லை. பெண்ணின் இதயமோ தன் அன்பனின்மேல் கொண்ட சந்தேகம் எனும் வியாதியால் தாக்கப்பட்டிருக்க, ஆணின் இதயமோ தன்னை முதல் முதலில் ஆட்கொண்ட ஏந்திழையாள் தன்மீது காரணமின்றி சந்தேகப்படுவதைத் தாங்கமுடியாத நிலையில், கோபமும், மன வருத்தமும் கொண்டு துக்கப்பட்டது. தன்மீது தக்க காரணமின்றி சந்தேகப்பட்டு தன்னையும், தன் அன்பனையும் வருத்திக் கொண்டிருக்கும் இளநங்கையின் மனதைத் தெளிய வைப்பதுதான் தன் முதல் கடமை என உணர்ந்தான், அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவிக்காமல் இன்னும் இருகப்பினைத்துக்கொண்டு “இளநங்கை, நீ அன்றிரவு நானும் ஒரு பெண்ணூம் பேசியதைக் கேட்டுத்தான் என்னைப் பற்றி சந்தேகப்பட்டாயா? இத்தனை நாளாக என்னுடன் மனம் விட்டுப் பழகியிருந்தும் என்னை முழுவதுமாக உன்னால் புரிந்து கொள்ள முடியவிலையா? அதனால்தான் என்னைவிட்டுப் பிரியவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாயா? எனக் கேட்டான்.
அவளும் தயங்காது, “நீங்கள் குறிஞ்சியிடம் பேசியதை என் இரு காதாலும் கேட்டேன் பிரபு. அவளிடம் நீங்கள் “நீ என்னை வந்து சந்திக்க இத்தனை நாட்களா எனக் கேட்க அவளும் “என்ன செய்வது பிரபு. நீங்கள்தான் என்னை யாருமில்லாத நேரத்தில் வந்து பார்க்கச் சொன்னீர்கள். ஆனால் எய்போதும் உங்கள் மனைவியும் உபதலைவியுமான இளநங்கை உங்களுடனேயே இருக்கிறார்கள். உங்களைப் பார்த்துப் பேச என்னால் இப்போதுதான் முடிந்தது, எனக் கூற நீங்களும் ஆமாம். அவள் எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள். என்ன செய்வது” என்றீர்கள்.’ இதைகேட்டவுடன் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று உங்களுக்குப் புரியாதா? நான் அன்று கோட்டைநிலவரத்தைப் பற்றி சொல்ல வந்ததையும் மறந்து துடிதுடித்துப் போய்விட்டேன். அப்போதுதான் புரிந்தது நான் உங்களுடன் இருந்த நேரமேல்லாம் நீங்கள் உங்கள் விருப்பப்படி இருக்கமுடியாது சங்கடப்பட்டீர்கள் என்பதையும்.. அதனால்தான் நான் அன்றே முடிவு செய்துவிட்டேன், என்னை நீங்கள் கூட்டிக் கொண்டு வந்தப் பணி முடிந்தவுடன், உங்களைவிட்டு விலகிவிடுவதென்று. அதனால்தான் நான் இன்று என் மனதைத் திறந்து சொல்லிவிட்டேன். எனக்கு உங்களின் விருப்பமும் சந்தோஷமும்தான் முக்கியமானது. உங்கள் மனம் ஆனந்தமாக இருக்க நான் எந்தத் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்கும் உங்களைப் பிரிந்து இருப்பது எத்தனைக் கொடுமையானது என் உயிரையே நான் இழந்து நடைபிணமாகத்தான் இனிவரும் சொற்ப காலமிருக்கும். என் பிரிவுக்குக் காரணம் தெரியாது நீங்கள் எந்த மன உளச்சலும், வேதனையும் அடையக்கூடாது என்றுதான் நானே உங்களிடம் சொல்லிவிட்டு, உங்கள் சம்மதத்துடன், உங்களைவிட்டுப் பிரிந்துபோக நினைத்தேன்.” எனகண்களில் நீர் வழியக் கூறினாள்
மனைவியின் அர்ததமற்றப் பேச்சினால் கோபம் அதிகமான வீரபாண்டியன் இளநங்கையின் தோள்களை முரட்டுத்தனமாகப் பற்றினான். பிறகு அவளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாகச் சொன்னான். போதும் “நிறுத்து உன் விவேகமற்றப் பேச்சை. நீ என்னைவிட்டுப் பிரிய நினைத்தாலும் என்னால் உன்னைப்பிரிந்து ஒரு வினாடியும் வாழமுடியாது. உனக்காக நான் என் உயிரைக்கூட விடுவேன், ஆனால் உன்னைமட்டும் நான் என்றும், எந்தக் காரணத்துக்காகவும் இழக்கச் சம்மதிக்க மாட்டேன்.
போர் காலத்தில் நான் பலரை என் ஒற்றர்களாகவும், எனக்குத் தேவையான விபரங்களைச் சேகரிக்கவும் அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. அப்படித்தான் நான் பணிப்பெண்னாக வேலைக்கு வந்த குறிஞ்சியையும் உபயோகப்படுத்திக் கொண்டேன். நீ நினைப்பதுபோல் அவள் ஒரு சாதாரண பணிப்பெண் அல்ல. அவள் இந்தக் கோட்டைக் காவலன் விஜயவர்மனின் மகள். அவளும் நம்மிடையே வேவு பார்க்கத்தான் விஜயவர்மனால் இங்கு பணிப்பெண் என்ற வகையில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். இது எனக்கு முதல் நாளிலேயேத் தெரியும். அவள் அடிக்கடி நம் கோட்டையை விட்டு வெளியே சென்று வருவதும் எனக்குத் தெரியும். அவளைக் கண்காணிக்கத்தான் நான் அவளை என் அறைக்குத் தனிமையில் வரச் சொல்லியிருந்தேன். அன்றுதான் அவள் என்னை முதல் முறையாகத் தனியாகச் சந்தித்தாள்.
என் இதயத்தில் ஒருவருக்குத் தான் இடமுண்டு. அதில் என்னைக் கவர்ந்த இளநங்கையைத் தவிர வேறு யாருக்கும் நுழையத் தகுதியில்லை. என் வாழ்வு உன்னோடுதான். இப்படிபட்ட அறிவீனமான எண்ணங்கள் உன் மனதில் உதிக்கும் என நான் கனவில் கூட நினைத்தது இல்லை” என்றவன் மீண்டும் அவளைப் பரிவுடன் பார்த்துச் சொன்னான். “ இளநங்கை நாமிருவரும் மனமொத்துப் பலகாலம் வாழவேண்டும். நம்மைப் பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது. நம்மிருவர் மனதிலும் ஒருவருக்கொருவர் மீது திடமான அன்பும், மாறாதக் காதலுமிருந்தால் அதுவே நம் வாழ்வின் ஜீவாதாரம். ஒன்றைமட்டும் நீ நன்றாகப் புரிந்து கொள். உன்னைக்கண்ட என் கண்களும், மனமும், மெய்யும் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் வேறு யாரையும் நினைக்காது. இது என் தாய்தேவி மீனாட்சியின் மீது ஆணை.” இனி இந்த மாதிரி அறிவுகெட்ட எண்ணங்ககளுக்கு உன் மனதில் இடம் கொடுக்காதே. உன்னை யாரென்றறியாமலே பொருனையாற்றில் நீலவண்ண நீரில் கருமேகக் கூட்டத்திற்கிடையே மலர்ந்த செந்தாமரைப் போன்ற உன் முகமலரைப் பார்த்து உன்னிடம் மனதைப் பரிகொடுத்தவன் நான். நாந்தான் என் மனதை முதலில் உன்னிடம் திறந்து காட்டினேன். அதே வீரபாண்டியந்தான் இன்றும் உன் முன் நிற்பவன். மேலும் இன்று என் உடலில் ஓடுவது உன் அன்பாலும், காதலாலும், நான் மரண காயம் பட்டிருந்தபோது, நீ எனக்குக் கொடுத்த உயிர் தான். என் வாழ்வில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. உன் மனமும் உள்ளமும் தெளிந்த முழு நிலவைப்போல் இருக்கவேண்டும். இந்த வினாடி முதல் நம்மிடையே எந்தவிதமான முரண்பாடோ, சலனமோ இருக்கக்கூடாது. போய் நல்ல நீரில் முகத்தை துடைத்துக்கொண்டு வா. நான் இன்று எத்தனை ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேன் என நீ அறிந்து இருக்க மாட்டாய். இனி மீதி இருக்கும் இரவில் இருவரும் அமைதியாக இருப்போம்” என்றான்.
கணவனின் முகத்தைப் பார்த்தவளின் கண்களுக்கு அவனின் காதலும், தன்னை எத்தனை ஆசையுடன் தேடி வந்திருப்பான் எனப் புரிந்தது. தன்னால் அவன் மனம் எத்தனை துன்பப்பட்டதென்றும் புரிந்து கொணடன. மெதுவாக அவன் விருப்பப்படியே சென்று தன் முகத்தை சில்லென்ற நீரில் சுத்தம் செய்துகொண்டு அவனருகில் வந்து நாணத்துடன் நின்றாள். அவளைப் பார்ததவனும் மிகப் பரிவுடன் அந்தப் பூந்தளிரைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு, மந்தஹாசமாகச் சிரித்தான். பிறகு தன் விருப்பப்படி அவளின் காது மடல்களைத் தன் பற்களினால் மெதுவாகப் பற்றி தன் உஷ்ணமான மூச்சையவள் காதுக்குள் செலுத்தி அவளைக் கூச்சப்பட வைக்க, அவளும் வழக்கம்போல் கூச்சம் தங்காது உடல் சிலிர்த்துக் கொண்டு சினுங்கினாள். அந்தச் செல்லச் சினுக்கங்கள் அவனின் விஷமங்களை உச்சத்துக்குக் கொண்டு சென்றன. அந்த இன்பக் கூடலில் ஒரு புஷ்பமாக மலர்ந்தாள் அந்தப் பூங்கொடி இளநங்கை.
அர்த்தமற்ற ஊடல் முடிந்து கூடலில் ஈடுபட்ட அந்தக் காதற் பறவைகளின் அந்தரங்கத்தில் இனி யாருக்கும் இடமில்லை.
“சுபம்”
No comments:
Post a Comment