(ஜெயரமணி)
குருத்தின் கேள்விகள்
(ஜயரமணி)
கௌதமன் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வரும்போதே தன்னுடைய நண்பனும் தற்போது ஒரு பெரிய பள்ளியின் நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுகுமாரனைப் பார்த்துவிட்டுத்தான் வந்தான். அவனின் முகத்தில் ஒரு இனம் புரியாத கலக்கம் இருந்தது. அவன் எதிர்பார்த்தபடி அவனுடைய நண்பன் இல்லை. அவன் தன் நட்புக்குமேல் பணத்தில்தான் குறியாக இருந்தான். தன்னுடைய பையன் அரவிந்தனுக்கு அந்த ஊரில் இருக்கும் ஒரு பெரிய பள்ளியில் பதினோராம் (பிள்ஸ்—1)வகுப்பில் சேர்க்கத்தான் அவன் தன் நண்பனின் உதவியை நாடிச் சென்றான். சுகுமாரன் அந்தப் பள்ளியில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்தான் இருந்தான். அதனால் அவன்மூலம் தன் மகனுக்கு அந்தப் பள்ளியில் இடம் வாங்க முடியுமென்றுதான் நம்பிக்கையோடு இருந்தான். ஆனால் அவனின் நண்பனோ அவனின் மகனுக்குத் தன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்க குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சமாவது நன்கொடையாகத் தருவதாயிருந்தால்தான் அரவிந்தனுக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைக்குமென்று உறுதியாகச் சொல்லிவிட்டான். அதுவும் கௌதமன் தன்னுடைய நண்பனாக இருப்பதால், நன்கொடையை குறைத்துக் கொண்டதாகச் சொல்லிவிட்டான்.
இரவில் கௌதமன் உறங்குமுன் தன்னுடைய மனைவி சுதாவிடம் தான் தன் நண்பனைப் பார்த்ததையும், அவன் அரவிந்தனை தன்னுடைய பள்ளியில் சேர்த்துக்கொள்ள குறைந்தது ரூபாய் ஒரு லட்சமாவது நன்கொடையாக கொடுத்தால்தான் அரவிந்தனுக்கு பள்ளியில் இடம் கொடுக்கமுடியுமென்றும் உறுதியாகச் சொன்னதையும் சொல்லி தன்னுடைய மனக்கவலையை அவளுடன் பகிர்ந்து கொண்டான். சுதாவும் தன் கணவருடைய வெகுநாள் ஆசையையும் தெரிந்தவள்தான். அதனால் எப்பாடுபட்டாலும் கௌதமனின் ஆசையை நிறைவற்ற வேண்டுமென்றும் தீர்மானித்தாள். அதனால் அவனிடம் மெதுவாக கேட்கலானாள். “நாமிருவரும்தான் கை நிறைய சம்பாதிக்கிறோமே, நம்மால்நம் குழைந்தையின் படிப்பிற்காக செலவிட முடியாதா? நம்முடைய மற்ற தேவைகளையெல்லாம் குறைத்துக் கொண்டாவது அவனின் படிப்பிற்காக வேண்டியதைச் செய்யவேண்டியதுதான். அரவிந்தனும் இதுவரை மிகவும் நன்றாகப் படித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவனின் புத்திசாலித்தனத்துக்கும், படிப்பில் அவனுக்கு இருக்கும் எல்லையில்லாத ஆசைகளுக்கும் இந்தமாதிரி ஒரு உயர்ந்த வசதிகள் கொண்ட தனியார் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும். நமக்கும் அவன் இப்படிபட்ட ஒரு வசதியான, தனியார் பள்ளியில் படிக்கிறானெறால் ஒரு பெருமைதான. அதுமட்டுமல்ல, அவனின் பிற்காலத்திற்கும் அவன் மேல் படிப்பிற்கும் நாம் இப்போழுதே தேவையான ” முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால் நாமிருவரும் எப்பாடுபட்டாவது அரவிந்தனை இந்தப் பள்ளீயில் ஆறாவது வகுப்பில் சேர்த்துவிட்டால், அவனின் 12வது வரை நிம்மதியாக இருக்கலாமே. நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், அரவிந்தனின் நண்பர்களும் நம்மைப் பெருமையாகத்தான் பார்ப்பார்கள். நாளைமுதல் நம்முடைய முதல் வேலையாக அவனுக்கு இந்தப் பள்ளியில் இடம் வாங்க என்ன செய்யவேண்டுமென்றுதான் யோசிக்க வேண்டும். மனதை தளர விடாதீர்கள். முயற்சி செய்யலாம்” என நம்பிக்கையாகச் சொல்லி அவனையும் உறங்கச் சொன்னாள். அவளும் உறங்க முற்பட்டாள். ஆனால் இருவரின் மனதிலும் பெரிய பாரம் ஏறியதால் தூங்கமுடியவில்லை.
மறுநாள் இருவருமே தங்களின் அலுவலத்திற்குப் போனவுடனே தங்களால் எந்தவகையிலும் அரவிந்தனை புதிய பள்ளியில் சேர்க்க தங்களுக்கு ஏதும் கடன் வாங்க வழி இருக்கிறதா எனப் பார்த்தனர்கள். ஆனால், அவர்களுக்கே நன்றாகத் தெரிந்ததுதான் தாங்களால் பணியின் மூலம் எத்தனை வகைகளில் அவசரத் தேவைக்காக முன்பணம் வாங்கமுடியுமோ அத்தனை வகைகளிலும் வாங்கியிருப்பது. இருந்தாலும் ஒரு நப்பாசைதான். தாங்கள் இதுவரை வாங்கிய கடனுக்காக கட்டிய தவணைத் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு ஒரு அளவுக்காவது அலுவலத்தின் மூலம் பணம் கிடைக்க வழியிருக்கிறதா எனப் பார்த்தார்கள். குழந்தைகளில் படிப்பிற்காக தனிச் சலுகையின் மூலம் கடன் கிடைக்குமா என்றும் பார்த்தார்கள். ஆனால் விதிகளின்படி கல்லூரி படிப்பிற்காகத்தான் தனி கல்வி உதவிச் சலுகைகள் கிடைக்கும். அரவிந்தனின் ஆறாம் வகுப்பிற்காக அந்தப் பிரிவில் கடன் வழங்கமுடியாது எனவும் தெரிந்துகொண்டார்கள். இருவரும் தங்களின் உணவு நேரத்தில் தங்களால் அலுவலகம் மூலம் எந்தவிதமான உதவியும் எதிர்பார்க்கமுடியாது எனத் தெரிந்து கொண்டதால், தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் மூலம் தங்களுக்கு ஏதும் உதவி கிடைக்குமா எனவும் யோசித்துப் பார்த்தார்கள். அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ இவர்களுக்கு உதவும் வகையில் பொருளாதாரவசதி படைத்தவர்களில்லை. ஒரே ஒரு உறவுதான் இருக்கிறது. அது கௌதமனின் சகோதரிதான். ஆனால் கௌதமன் தன் விருப்பப்படி சுதாவை காதலித்து கலியாணம் செய்து கொண்டதால், கௌதமன் சிறு வயதாக இருக்கும்போதே தன்னுடைய பெண்ணை அவனுக்குத்தான் திருமணம் செய்துவைக்கவேண்டுமென்று தீராத ஆசையோடு இருந்தவளுக்கு, தன் தம்பி தன் பெண்ணைவிட்டு வேறு பெண்ணைக் காதலித்து, தன் பேச்சைக் கேட்காமல் திருமணமும் செய்து கொண்டுவிட்டதால், அவர்கள் இருவரின் பேரிலும் தீராத பகைதான் கொண்டிருக்கிறாள். அதனால் அவளிடம் தாராளமாகப் பணம் இருந்தாலும், தங்களுக்குக் கொடுக்கமாட்டாள் என்பது நன்றாகத் தெரிந்த விஷயம்தான்.
அன்று மாலையில் அவர்களின் அலுவலக நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தங்களுடைய பிரச்சினையைச் சொன்னார்கள். அவர் அதற்கு தன்னுடைய உறவினர் ஒருவர் இந்த மாதிரி அவசரத் தேவைகளுக்கு பணம் கொடுத்து உதவுவதாகவும், ஆனாலப்படி செய்யும் உதவிக்கு வட்டியும் வாங்குவார் என்றும் சொல்லி, அவர்களுக்குச் சம்மதமென்றால் தான் அவரிடம் பேசிவிட்டு சொல்வதாகச் சொன்னார். கௌதமனுக்கும் சுதாவுக்கும் அவர் தானாகவே முன் வந்து தங்களுக்கு உதவி செய்ய வந்ததுபற்றியும், தங்களுடைய தேவைகளுக்கு ஒரு தீர்வும் கிடைக்குமென்பதாலும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நண்பரின் மூலம் வட்டிக்குப்பணம் கொடுக்கும் அந்த நிறுவனத்திற்கும் சென்று விபரங்களை தெரிந்து வந்தார்கள். தீவீரமாக யோசித்துப் பார்த்தபின், அப்படி பணம் வாங்கினால், தங்களுடைய மாதாந்திர செலவினங்கள் என்னவெல்லாம் இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தார்கள். ஒரு லட்சரூபாய்க்கு இருபது மாதத்தவணையில் அசலும், அதற்கு கட்டவேண்டிய வட்டியும் சேர்த்து, மாதம் தவறாமல் குறைந்தது ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் தங்களுடைய மாத செலவினங்கள் கூடும் என்றும் கணக்குப் போட்டுப் பார்த்தார்கள்.
அன்று சனிக்கிழமை. கௌதமன், சுதா இருவருக்கும் அலுவலக விடுமுறைநாள். அதனால் இருவரும் காலையில் எழுந்தவுடனே தாங்கள் மேற்கொண்டு எடுக்கவேண்டிய முன் ஏற்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். தங்களுடைய மாதாந்திர செலவினங்களை பட்டியல் போட்டார்கள். அதில் எந்தேந்த வகையில் தங்களுடைய மாத செலவினங்களை குறைத்துக்கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டார்கள். முதலில் தன்வீட்டில்மேல் வேலைசெய்யும் சரசுவை வீட்டு வேலைக்கு வரவேண்டாமென்று சொல்லவும், அவளுக்கு உடனடித்தேவைக்காக கொஞ்சம் பணம் கொடுத்துவிடவும் முடிவு செய்தார்கள். அதனால் அவர்களின் மாதச் செலவினத்தில் ரூபாய் ஆயிரத்து ஐந்தூறு மிஞ்சும். அடுத்ததாக தங்களுடைய அன்றாட செலவினங்களில் எதையெல்லாம் குறைக்க முடியுமென்று பட்டியல் போட்டார்கள். முதலில் அவர்கள் குறைக்க தீர்மானித்தது வீட்டிற்கு வாங்கும் பால்தான். தினமும் இரண்டிரை லிட்டர் வாங்கும் இடத்தில் ஒரு லிட்டர் குறைத்தால் தங்களுடைய உணவுச்செலவில் ஆயிரம் ரூபாய் குறைக்கமுடியுமென்றும் கணக்குப் போட்டார்கள். அப்போதுதான் கௌதமன் சுதாவிடம் கேட்டான் :”உன் உடல் இருக்கும் நிலையில் நாம் சரசாவை நிறுத்திவிட்டால், வீட்டு வேலைகளையெல்லாம் தனியாக செய்துகொண்டு, ஆபீஸுக்கும் போய் வர முடியுமா? சரசாவும் பாவம் மிகவும் ஏழைதான். திடீரேன்று அவளின் மாத வருமானம் குறைந்தால், அவளுக்கும் அது கஷ்டமாகத்தானே இருக்கும்என்றான்.
அதற்கு சுதா சொன்னாள் “நம்முடைய ஒரேலட்சியம் அரவிந்தனின் எதிர்காலம்தான். அதை சீராக அவனுக்குக் கிடைக்க வேண்டுமானால், நாம் எல்லாவிதத்திலும் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். அதில் சரசா மட்டுமல்ல, நாமும் நம்முடைய வசதிகளையும் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும்” என தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். மேலும் சொன்னாள் “இனிமேல் நம்முடைய துணிகளையெல்லாம் நாமே இஸ்திரி போட்டுக்கொண்டால், வாராவாரம் அயர்னுக்குக் கொடுக்கும் ரூபாய் நூறும் மிச்சமாகும். உடனே கௌதமனும் சொன்னான் “நானும் இனிமேல் தினமும் என்னுடையதும், அரவிந்தனுடைய உடைகளை துவைத்துக் கொண்டுவிடுகிறேன். உனக்கும் கொஞ்சம் சிரமம் குறையும்” என்று. அன்று சனிக்கிழமையென்பதால், அரவிந்தனுக்கும் பள்ளியில்லை. அவனும் அப்போதுதான் எழுந்து வந்தான். வரும்போது சுதா “நமக்கு அரவிந்தனின் எதிர்காலம்தான் முக்கியம். அதை அடைவதற்காக நாம் நம்முடைய சில சௌகரியங்களை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும்” எனத் தீர்மானமாகச் சொன்னதையும் கேட்டான்.
அதனால் அவன் தன்னுடைய பெற்றோர்களைப் பார்த்து, “இப்போது எனக்கு என்ன அசௌகரியம் இருக்கிறது. எதற்காக நீங்கள் எல்லாம் உங்களுடைய சௌகரியங்களைக் குறைத்துக் கொள்ளத் தீர்மானித்து இருக்கிறீர்கள்” என்றும் கேட்டான். கௌதமன் அவனைப்பார்த்து “அரவிந்த், நீ இந்த வருஷமுதல் பிளஸ்—1 வகுப்பிற்குப் போவதால், உன்னை நாங்கள் இந்த ஊரில் உள்ள ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கத்தீர்மானித்து இருக்கிறோம். அந்தப் பள்ளியில் பள்ளிக் கட்டணம், டொனேஷன், மற்ற இதர சிலவினங்கள் அதிகம். அதற்காகத்தான் நானும் உன் அம்மாவும் பத்து நாட்களாக அந்தப் பள்ளி நிர்வாகத்தினரைப் போய் பார்த்து, உனக்கு அந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்துவந்தோம். இனிமேல் நம்முடைய சில வீட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால், உன் படிப்பிற்காக நன்றாகவே செய்ய முடியும். உன்னுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும்.” என்றான்.
அரவிந்தனும் தன்னுடைய அப்பாவைக் கேட்டான் “ஏனப்பா நான் இப்போழுது படிக்கும் பள்ளியிலேயே பள்ளியிறுதியாண்டு வரை வகுப்புகள் இருக்கிறதே. நான் கல்லூரி படிப்பிற்காகத்தானே வேறு கல்லூரிக்குப் போக வேண்டும். அப்படியிருக்க, எதற்காக என்னை இப்பவே, வேறு பள்ளிக்கு மாற்றுகிறீர்கள்” எனவும் கேட்டான்..
“அரவிந்தா, இந்தப் பள்ளியில் நீ தொடர்ந்து படிக்கலாம். ஆனால், இது அரசு உதவிபெறும் ஒரு சாதாரண பள்ளிதான். நீ இப்போதுமுதலே ஒரு பெரிய தனியார் நிறுவனம் நடத்தும் பள்ளியில் படித்தால், உன்னுடைய எதிர்காலம் நன்றாக இருக்க எல்லா வசதி வாய்ப்புகளும் உனக்குக் கிடைக்கும். நாங்கள் கொஞ்சகாலம் சிரமப்பட்டாலும், உன்னுடைய வருங்காலம் நன்றாக இருக்குமல்லவா. அதுதான் எங்களின் விருப்பமும். மேலும் உனக்கு அந்தப் பள்ளியில் படிப்பதால், வசதி பெற்றவர்களின் குழந்தைகளின் நட்பும் கிடைக்கும். நீயும் அவர்களைப் போல பொது விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பும் உண்டு” என்றும் கூறினான்.
சுதாவும் கௌதமனைத் தொடர்ந்து “ஆமாம் அரவிந்த், உன்னுடைய பழக்க வழக்கங்களும் மேலும் சீராகும். நீயும் மேல்தட்டுக் குழந்தைகளைப்போல் திடமாக இருக்கலாம்” என்றும் கூறினாள்.
“அம்மா, அப்பா நான் ஆரம்பமுதல் இந்தப் பள்ளியில்தானே படித்து வருகிறேன். என்றாவது என்னுடைய பழக்க வழக்கங்கள் உங்களுக்குத் திருப்தியாக இல்லாமல் இருந்ததா? என்னுடைய பள்ளியில் எந்த ஆசிரியராவது நான் பள்ளியிலோ, வெளியிடங்களிலோ முறை தவறி தப்பாக நடந்ததாக உங்களிடம் முறையிட்டார்களா? இந்தப் பள்ளி ஆசிரியர்கள் தக்க தகுதியற்றவர்களா, அவர்கள் எங்களுக்குச் சரியாக பாடங்களை போதிக்கவில்லையா, அல்லது எங்கள் பள்ளி மாணவர்கள் ஒழுக்கக்கேடாக எந்த இடத்திலாவது நடந்து கொண்டதாக உங்களுக்குத் தெரிய வந்ததா? இந்த ஊரில் உள்ள எல்லா சிறுவர்களுமே நீங்கள் சொல்லும் அந்த பெரிய தனியார் நிறுவனப் பள்ளியில்தான் படிக்கிறார்களா? இல்லையே. அவர்களும் நல்ல மாணவர்களாகத்தானே இருக்கிறார்கள். இன்றுவரையில் நீங்கள் இருவரும் என்னுடைய பள்ளிச் செலவுக்காக கஷ்டப்பட்டீர்களா. இல்லையே. இந்தப் பள்ளியிலேயே நான் தொடர்ந்து படிக்க வசதியிருக்கும்போது, எதற்காக என்னை வேறு பள்ளிக்கு மாற்ற விரும்புகிறீர்கள்.” என்றும் கேட்டான்.
அரவிந்தனின் கேள்விகளுக்கு கௌதமன் பதிலாகச் சொன்னான். “அரவிந்தா நீ எங்களின் ஒரே பையன். உன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். இப்போழுது நீ படிக்கும் பள்ளியின் மீது எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. நீ இந்த வருடம் முதல் இந்த ஊரிலுள்ள அந்தத் தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டால், உனக்கு பள்ளியிருதிவரையில் எந்த விதமான தடங்களுமில்லாது படிக்க முடியும். உன் கல்வி திறனும் மிக நன்றாக வளர அந்தப் பள்ளியில் எல்லா விதமான வசதிகளும் உண்டு. மேலும் அங்கு படிக்கும் மாணவர்கலெல்லாம் ஓரளவு வசதியானகுடும்பத்திலிருந்துதான் வருவதால், உனக்கும் மேல் தட்டு மாணவர்களுடன் பழகவும், அவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வசதி வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். அந்தப் பெரிய பள்ளியில் உன் விருப்படியே தனியாக எந்த வகை படிப்பில் தேர்ச்சிபெறவிரும்புகிறாயோ அந்தப் பாடத்திலேயே தனிக் கவனம் செலுத்தி படிக்கவும் வாய்ப்புகள் உண்டு. கொஞ்சகாலம் நாங்கள் கஷ்டப்பட்டாலும், உனக்கு உன்னுடைய எதிர்காலம் நன்றாக உருவாக முடியும். அந்தப் பள்ளியிலிருந்து நீயும் மேற்படிப்பிற்காக, கல்லூரிக்குச் செல்லவும் முடியும். அதனால் தான் நாங்கள் உன் பள்ளியை மாற்ற விரும்புகிறோம்.” என அன்பாகச் சொன்னான்.
“அப்பா. எனக்கு உங்களிருவரின் ஆசைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் இப்போது படிக்கும் பள்ளியில் படித்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லவில்லையா? எல்லா மாணவர்களுமே கல்லூரிக்குச் செல்ல தனித் தேர்வு எழுதத்தானே வேண்டும். எங்கள் பள்ளி மாணவர்களும்தான் அந்தத் தேர்வு எழுதி, தங்களுடைய மேற் படிப்பைத் தொடரத்தானே செய்கிறார்கள். அப்பா இன்னுமோரு சந்தேஹம். என்னை நீங்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க நீங்கள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டுமல்லவா? அதெல்லாம் நீங்கள் யோசித்துப்பார்த்தீர்களா?”எனவும் கேட்டான்.
அதற்கு பதிலாக, சுதாச் சொன்னான் “அரவிந்தா, அதெல்லாம் நாங்கள் யோசித்து விட்டோம். முதலில் அந்தப் பள்ளியில் புதியதாகச் சேர ரூபாய் ஒரு இலட்சம் டொனேஷனாக செலுத்த வேண்டுமாம். பிறகு பள்ளியில் வகுப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தனிப் பிரிவிற்கான சிறப்பு வகுப்பிற்கான கட்டணங்கள், யூனிபார்ம், விளயாட்டுக் கருவிகள், நூலகக் கட்டணம், பள்ளிக்குச் சென்றுவர பஸ் கட்டணம் என வருட்ததிற்கு குறைந்தது ரூபாய் இரு இலட்சங்களாகும். முதல் வருடம் மட்டும் மூன்று இலட்சங்கள் செலவு செய்து விட்டால், அடுத்தவருடத்திலிருந்து இரு இலட்சம் மட்டும் செலவு செய்தால் போதும். என்ன உன்னுடைய பள்ளியிருதி வகுப்புவரைக்கும் எங்களுக்குச் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கும். பிறகு நீ கல்லூரிக்குச் சென்றுவிட்டால், நாங்கள் உன் மேற்படிபிற்காக வங்கியின் மூலம் கடன் பெறலாம். அதற்கு வட்டியும் கொஞ்சமாகத்தானிருக்கும். மேலும் அந்தக் கடன் தொகையை நீயே உன் வருங்காலத்தில் சம்பாதித்துக் கட்டி விடலாம். அதெல்லாம் யோசித்துத்தான் நாங்கள் இப்போழுது முதல் வருடத்திற்கு மட்டும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பிறகு மாதத்தவணையில் திருப்பிக் கொடுத்துவிடுவோம். அதெல்லாம் எங்களின் பொறுப்பு. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல், எங்களின் விருப்பத்தை நிறைவேற்றப் பார்” எனத் தீர்மானமாகச் சொல்லிமுடித்தாள்.
தாயின் கருத்துக்களைக் கேட்ட அரவிந்தன் , “அம்மா நீங்கள் என்னுடைய எதிர்கால நலனுக்குத்தான் இத்தனை பாடுபடுகிறீர்கள் என்பதை நானும் உணர்ந்து கொண்டேன். ஆனால் என்னுடைய அனுபவமற்ற மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் சில சந்தேஹங்களுக்கு நீங்கள் தீர்வு சொல்லுங்கள். என்னால் இப்போது படிக்கும் பள்ளியிலேயே தொடர்ந்து பள்ளியிருதி வகுப்புவரை நன்றாகவே படிக்க முடியும். என்னுடைய தற்போது படிக்கும் பள்ளியிலேயே எனக்காக நீங்கள் செய்ய வேண்டிய சிலவுகள் உங்களுடைய வருமானதிற்குள் தானே இருக்கிறது. அப்படியிருக்கையில், நீங்கள் எதற்காக உங்களின் அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, பணம் சேர்த்து, எனக்காக செலவிடவேண்டும். என்னுடைய கல்லூரிப் படிப்பிற்காக வேண்டுமானால் நீங்கள் அதிகமாக செலவு செய்யப் போவது அவசியமே. ஆனால் இப்போதே அத்தகைய முயற்சிகளை எதற்காக எடுக்கவேண்டும். நான் இப்போது படிக்கும் பள்ளியில் நீங்கள் எனக்காக புதியதாக எந்த விதமான பள்ளிக் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை. புதிய பள்ளிக்கு டோனேஷன் எனவும் தனியாகப் பணம் செலுத்த வேண்டுமெனச் சொல்கிறீர்கள். அப்பா, டொனேஷன் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன “தருமம்” என்பதுதானே? இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அவர்களாகவே முன் வந்து விருப்பப்பட்டுக் கொடுக்கும் பண உதவிதானே. ஆனால் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் புதிய பள்ளியில் எல்லா வசதிகளும் இருப்பதாகவும், மிகவும் வசதியானவர்கள் சேர்ந்து படிக்கப் போகும் பள்ளியென்றும் சொல்கிறீர்கள்.அப்படி யிருக்கும்போது எதற்காக நம்மைப் போன்ற நடுத்தர மக்களிடம் பள்ளியில் சேரும்போது தனியாக டொனேஷன் என்ற பெயரில் பணம் வாங்குகிறார்கள். இது சட்டப்படி முறையற்றச் செயல்தானே? அதற்கு நீங்களும் உடந்தையாக இருக்க வேண்டுமா?உங்களுக்கு என் படிப்பிற்காக தனியாக தரும நிதி தரவேண்டுமென்று ஆசையிருந்தால், ஒன்று செய்யுங்கள். என்னை தயவுசெய்து நான் இப்போது படிக்கும் பள்ளியிலேயே, என் இளமைக்கால முதல் சேர்ந்து படிக்கும் பழைய நண்பர்களுடனேயே படிக்க அனுமதியுங்கள். என்னுடைய பள்ளி நடுத்தர மாணவர்கள் சேர்ந்து படிக்கும் ஒரு அரசு உதவி பெரும் பள்ளிதான். எனக்கு மட்டும் மேற்படிப்பிற்காக நீங்கள் செலவு செய்ய முன் வருவதை, என்னுடைய பழைய பள்ளிக்கே உங்களின் தரும நிதியாகச் கொஞ்சம் கொடுத்தாலும், அது எங்கள் பள்ளிக்கு பெரிய உதவியாகவே இருக்கும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும், எங்கள் பள்ளியின் அத்தியாவசியமான ஒரு துறைக்குச் சேரும். உண்மையாகவே அந்த நிதி வருங்கால மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நீங்கள் புதிய பள்ளிக்கு கொடுக்க இருக்கும் கட்டாய டொனேஷன் ரூபாய் ஒரு இலட்சம், அந்தப் பள்ளியைப் பொறுத்த வரையில் ஏற்கேனவே உப்பாகக் கரிக்கும் கடல்த் தண்ணீரில் உங்களால் கரைக்கும் ஒரு பிடி உப்பாகத்தான் வெளியில் தெரியாமல் கறைந்து போகும். அதே பணத்தை, என்னுடைய பள்ளிக்கு முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஒரு சிறு அளவிளாவது நீங்கள் பள்ளியில் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தால், அதுவே பள்ளிக்கு வளர்ச்சிக்கு உதவும் ஒரு பெரிய பங்காக இருக்கும். உங்களால் முடிந்தால், என் பள்ளிக்கு ஒரு நல்ல வாசக சாலை அமைத்துக் கொடுக்கலாம். பள்ளி மாணவர்களால் தனிப்பட்ட முறையில் வாங்க இயலாத சில உயர்ந்த நூல்களைவாங்கிக் கொடுக்க முடியும். மேற்படிப்பு மாணவர்களுக்காக, ஒரு சிறிய அளவிலாவது அறிவியல் கூடம் அமைத்துக் கொடுத்தால், நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல நடுத்தர மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும். உங்களின் உதவியால், எனக்கு மட்டுமல்ல, இனி வருங்காலத்தில் இந்தப் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் நீண்டகால உதவியாக இருக்கும்.
நான் உங்களைப் போல அறிவில் பெரியவனில்லை. எனக்கு நான் படிக்கும் பள்ளி நல்ல வசதிகளுடன் கூடிய ஒரு பள்ளியாக வ:ளரவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. உண்மையாகவே தேவையிருக்கும் இடத்தின் வளர்ச்சிக்காக முயற்சிகள் செய்யாமல், தேவையில்லாமல், பகட்டிற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஒரு பொருளாதாரத்தில் வசதி அடைந்த தனியார் கல்விநிறுவனத்திற்கு, நம்முடைய உழைப்பால் தேடிய பொருளை அவசியமின்றி நீங்கள் செலவிடவேண்டுமா என யோசியுங்கள். உங்களின் உழைப்பும், விருப்பமும் காலங்காலமாக நிலை நிற்கவேண்டுமா அல்லது சமுத்திரத்தில் கரைத்த ஒரு பிடிஉப்பாக வேண்டுமா என நீங்களே தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள். நான் உங்களின் அன்புக்குக் கட்டுப் பட்டவன் தான். நீங்கள் என் விருப்பத்திற்குமாறாக, உங்களின் ஆசைக்காக, என்னை அந்தத் தனியார் பள்ளியில் அதிக பணம் செலவழித்து சேர்க்கத்தான் முடிவு செய்தீர்களென்றால். நான் அதற்குக் கட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும். மாதா பிதா தான் முன் நிற்கும் தெய்வங்கள் என்பது தான் எனக்குப் பள்ளியில் சொல்லிக்கொடுத்த முதல் பாடம். அதை நான் மீற மாட்டேன். உங்களிடம் என் கருத்தையும், ஆசையையும் சொல்லி விட்டேன். முடிவு உங்கள் கைகளில்தான். நீங்கள் என்ன சொன்னாலும், அதுவே என் தாரக மந்திரம். உங்களை எதிர்த்துப் பேசியதாக தயவுசெய்து எண்ணாதீர்கள். என்னுடைய கருத்தை உங்களிடம் சொன்னேன்.” எனப் பனிவாகப் பேசிவிட்டு, அரவிந்தன் விளையாட தன் பள்ளி மைதானத்திற்குச் சென்றான்.
மறுநாள் காலையில் கௌதமன் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டான். அவன் மனம் நேற்றையதினம் அரவிந்தனின் கருத்துக்களைக் திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்தன. அவனின் மனதிலும் தன் பையன் அரவிந்தன் சொன்னதின் உட்கருத்தின்பால் ஒரு ஈடுபாடு தோன்றின.மகனின் வாதத்தில் இருந்த ஒரு சமூக நோக்கம் அவனுள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னைச் சுற்றியுள்ள ஒரு அரசு உதவியுடன் இயங்கும் ஒர் சாதாரண கல்வியகத்திற்கு, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அந்தப் பள்ளியும் வருங்காலத்தில் ஒரு பெரிய பள்ளியாக வளருவதற்கு வாய்ப்பு கிடைக்குமென்றும் அவன் மனதில் தோன்றியது. மகனுடைய விருப்பத்தைப் புரிந்து கொள்ளாமல், தன்னிச்சையாகவே அவனை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமென்ற தன்னுடைய ஆசை எத்தனை தப்பானதுஎனவும் அவனுக்குப் புரிந்தது. படிக்கும் மாணவனின் விருப்பத்தை தான் கருத்தில் கொள்ளாதது சரியல்ல எனவும் புரிந்து கொண்டான். தற்போது அரவிந்தன் படிக்கும் பள்ளியிலேயே அவனை தொடர்ந்து படிக்க வைக்கவும், அவனின் விருப்பப்படியே தன்னாலும், தன் நண்பர்களாலும் அந்தப் பள்ளிக்கு செய்யக்கூடிய வசதிகளை செய்து கொடுத்து, தங்களுடைய இடத்தைச் சேர்ந்த அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்குச் தன்னால் எத்தனை உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்து, தன் ஒருமகன் மட்டுமல்லாது, மற்ற வசதியற்ற, நடுத்தர மாணவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்று, அவர்களின் எதிர்காலமும் பிரகாசமாகத் திகழச்செய்வதுதான் இன்றுமுதல் தன்னுடைய தலையாய சமூகப்பணியாக இருக்க வேண்டுமென்று ஒரு முடிவுக்கும் வந்தான். அவன் மனமும் குழப்பங்களிலிருந்து விடுபட்டுத் தெளிவு கண்டது. கௌதமனும் அன்று அரவிந்தனுடன் அவனுடைய பள்ளிக்குச் சென்றான். அரவிந்தனுக்குத் தன் அப்பா தன்னுடன் வருவதின் காரணம் தெரியவில்லை. அவன் மனதிற்குள் தன்னுடைய அப்பா அவர் விருப்பப்படியே தன்னை வேறு தனியார் பள்ளியில் சேர்க்க முடிவு செய்து, அது விஷயமாகத்தான் தன்னுடைய பள்ளிக்கு வுருகிறார் என முடிவும் செய்து கொண்டான்.
பள்ளிக்குச் சென்றவுடன், பள்ளியில் தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றார்கள். கௌதமன், தலைமையாசிரியரிடம் தான் தன் மகன் அரவிந்தனை அந்த ஊரிலிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க முடிவு செய்ததாகவும், ஆனால், நேற்று மாலையில் தன்மகன் அரவிந்தனின் கருத்தைக் கேட்டபின், தன்னுடைய முடிவு சரியானதல்லவென புரிந்து கொண்டதும், தன்னுடைய மகனின் விருப்பப்படியே அவனை பள்ளியிருதியாண்டுவரையில் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டான். அவன் கடைசியாக தன்னுடைய ஒரு வேண்டுகோள் எனச்சொல்லி தன் மகனுடைய விருப்பப்படியே அந்தப் பள்ளிக்கு ஒரு நல்ல வசதியான வாசக சாலையும், பள்ளியிருதி வகுப்பு மாணவர்களுக்காக ஒரு அறிவியல் கூடமும் அமைக்கத் தேவையான பொருள் உதவியும் செய்ய முன்வருவதாகவும் சொல்லிவிட்டுத், தன் மகன் அரவிந்தனைப் பார்த்து, :அரவிந்தா இப்போது உனக்கு முழு மனத் திருப்திதானே” எனவும் பிரியமாகக் கேட்டான். தன் அப்பாவின் முடிவைக் கேட்டவுடன், அரவிந்தனுக்கு அளவிட முடியாத சந்தோஷம் ஏற்பட்டது. தன்னுடைய நன்றியை எப்படி அப்பாவிடம் சொல்லுவது எனத் தெரியாமல், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, அந்த இடத்திலேயே, தன்னுடைய அப்பாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டு தாள் பணிந்தான். மகனின் சந்தோஷத்தைப் பார்த்த கௌதமனுக்கும் கண்களில் நீர் பெருக, மகனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, :அரவிந்தா நான் தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். நீ நேற்று மாலையில் சொன்னவைகள் எல்லாம், என்னுடைய தன்னலத்தைத் தொடைத்துவிட்டு, உன் ஒருவனின் எதிர்காலத்திற்காக மட்டும், வாழாமல், உன் போன்ற பல மாணவர்களின் எதிர்காலத்திற்கும் சேர்த்து வாழ வேண்டுமென்றும், நான் பிறந்த இந்த நாட்டுக்கு என்னால் ஆன சேவைகளைச் செய்ய வேண்டுமென்ற ஒரு புதிய எண்ணமும் எனக்குள் தோன்ற காரணமானவே நீதான். உன்னால் நான் இன்றுமுதல் இனி என்றென்றும் நல்லதொரு சமூக நோக்கமுள்ளவனாக வாழுவேன். இது உன் பள்ளி தலையாசிரியர் முன் நான் செய்யும் சபதமாகும்.” எனச் சொன்னான்.
கௌதமன் வீட்டிற்கு வந்தவுடன், சுதா அவனிடம் “உங்கள் நண்பர் சுகுமாரன் ப்போன் பண்ணினார். உங்களை வந்தவுடன் பேசச் சொன்னார்”என்றாள். கௌதமனும் உடனடியாகப் ப்போனை எடுத்து சுகுமாரனுடன் தொடர்பு கொண்டான். “சுகுமாரா, நான் என்னுடைய முடிவை மாற்றிக் கொண்டேன். என் மகன் அரவிந்தனை தொடர்ந்து அவன் தற்போது படிக்கும் பள்ளியிலேயே படிக்க வைக்க முடிவு செய்து விட்டேன்” என்றான். அதற்கு சுகுமாரன் கேட்டான் “என்ன காரணம். உன்னால் உடனடியாக முழுத் தொகையும் கட்ட முடியவில்லையென்றால், நான் உனக்கு இரு முறையாகக் கட்டுவதற்கு வசதி செய்து தருகிறேன்” எனவும் சொல்ல, கௌதமன் “சுகுமாரா என்னுடைய முடிவில் மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம் பொருளாதார வசதி இல்லை. என்னுடைய கண்களைச் என் மகன் திறந்து விட்டான். நான் இந்த சமூகம் முன்னேற என்னால் முடிந்த உதவிகளை, வசதிகள் குறைந்த அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கே செய்து, நம்முடைய கடமைகளைச் செய்ய முடிவு செய்து விட்டேன். தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் டொனேஷன் சமுத்திரத்தில் ஒரு கைப்பிடியளவே கரைக்கும் உப்பாகத்தானிருக்கும். ஆனால், அதில் பாதி பங்கு பொருளாதார உதவியும், முழு மனசுடனும் முடிந்த உதவிகளைச் செய்வது, இருட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு தீப ஒளி கொடுப்பதற்குச் சமமாகுமென்றும் புரிந்து கொண்டேன். இதற்கெல்லாம். என் மனதை திறந்த, என் மகன் அரவிந்தன் தான் காரணம். எனக்கு அவனைப் பொறுத்தவரையில் அந்தச் சுவாமிதானேயாகும்” என மனத்திருப்தியாகச் சொல்லி தன்னுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டினான். அவனுடன் சுதாவும், தன் மகனைப் பெறுமையாகப் பார்த்து, பூரித்தாள்.
இன்றைய இந்தியாவிற்கு வேண்டியது அரவிந்தன் போன்ற இளம் குறுத்துக்கள்தான்.